search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

    டெல்லியில் தரமற்ற குடிநீர் - கெஜ்ரிவால் வீட்டின் அருகே பாஜக போராட்டம்

    டெல்லியில் குடிநீர் தரமற்று உள்ளதாக பல்வேறு குடிநீர் மாதிரிகளை பாட்டிலில் எடுத்து வந்து முதல் மந்திரி கெஜ்ரிவால் இல்லத்தின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுடெல்லி:

    மத்திய நுகர்வோர் துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட இந்திய தரக்கட்டுப்பாட்டு முகமை சமீபத்தில் இந்தியாவில் உள்ள 17 மாநிலங்களின் தலைநகரங்களில் அரசால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்துக்கான பரிசோதனைகளை நடத்தியது.

    தண்ணீரில் கலந்திருக்கும் தனிமங்கள், ரசாயனம், கிருமிகள், துர்வாடை உள்ளிட்ட 11 வகையான தரக்கட்டுப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மும்பை மாநகர குடிநீர் தூய்மையாக உள்ளதாக கண்டறியப்பட்டது.

    ஆனால் நாட்டின் தலைநகர் உள்பட சென்னை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் குடிநீர் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய தரக்கட்டுப்பாட்டு முகமை தெரிவித்தது.

    இந்நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட குடிநீர் பாட்டில்களுடன் முதல் மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டின் அருகே பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    இலவச குடிநீர் என்ற பேரில் மாசுபட்ட குடிநீரை கெஜ்ரிவால் குடிக்கச் சொல்கிறார் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

    Next Story
    ×