என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும்- நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்16 Nov 2019 6:28 AM GMT (Updated: 16 Nov 2019 6:28 AM GMT)
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடு முழுவதும் பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை:
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நேற்று டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை என சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் அறிவித்தது.
மேலும் இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X