என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- ஒருவர் பலி, 25 பேர் காயம்
Byமாலை மலர்4 Nov 2019 9:49 AM GMT (Updated: 4 Nov 2019 9:49 AM GMT)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை பழிவாங்கும் விதமாக மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்தது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா ஆகிய 2 பயங்கரவாத அமைப்புகள் விரைவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. வரும் குளிர்காலத்தில் இந்த தாக்குதலை மேற்கொள்ள உள்ளது என தெரிவித்தது. இதையடுத்து எல்லைப்பகுதிகளிலும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீநகர் ஹரி சிங் பகுதியில் இன்று மதியம் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் பலியாகினார். மேலும் சுமார் 25 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X