என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி
Byமாலை மலர்30 Oct 2019 10:15 AM GMT (Updated: 30 Oct 2019 10:15 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடி, நாளை குஜராத் சென்று ஒற்றுமை சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
புதுடெல்லி:
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.
2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, வல்லபாய் படேலின் பிறந்த தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத்துக்கு செல்கிறார். அங்கு சரோவர் அணையில் அமைக்கப்பட்டு உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டியது குறித்து விளக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X