என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியம், அரியானாவில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறும்- கருத்து கணிப்பில் தகவல்
Byமாலை மலர்19 Oct 2019 8:53 AM GMT (Updated: 19 Oct 2019 8:53 AM GMT)
மராட்டியம் மற்றும் அரியானாவில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றி பெறும் என்று கருத்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மராட்டியம், அரியானா மாநிலங்களில் நாளை மறுநாள் (21-ந்தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இரு மாநிலங்களிலுமே தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மராட்டியத்தில் இம்முறை சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தும், அரியானாவில் தனித்தும் பா.ஜனதா போட்டியிடுகிறது.
இந்நிலையில் ஏ.பி.சி. நியூஸ், சி-வோட்டர் கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம். பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதா 82 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரசுக்கு 3 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பிலும் இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி தொடரும் என கூறி உள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு 142 முதல் 147 இடங்களும், சிவசேனாவுக்கு 83 முதல் 85 இடங்களும் கிடைக்கும்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 48 முதல் 52 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பா.ஜனதாவுக்கு 58 முதல் 70 இடங்களும், காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 5 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.
அரியானாவில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 47 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
மராட்டியம், அரியானா மாநிலங்களில் நாளை மறுநாள் (21-ந்தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இரு மாநிலங்களிலுமே தற்போது பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மராட்டியத்தில் இம்முறை சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தும், அரியானாவில் தனித்தும் பா.ஜனதா போட்டியிடுகிறது.
இந்நிலையில் ஏ.பி.சி. நியூஸ், சி-வோட்டர் கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
மராட்டியத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு 198 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 76 இடங்கள் வரை கிடைக்கலாம். பிற கட்சிகளுக்கு அதிகபட்சம் 8 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பா.ஜனதா 82 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரசுக்கு 3 இடங்களும், பிற கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்து கணிப்பிலும் இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி தொடரும் என கூறி உள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு 142 முதல் 147 இடங்களும், சிவசேனாவுக்கு 83 முதல் 85 இடங்களும் கிடைக்கும்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 48 முதல் 52 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் பா.ஜனதாவுக்கு 58 முதல் 70 இடங்களும், காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 5 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டியிட்டு 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றி இருந்தன.
அரியானாவில் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 47 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X