search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கணிப்பு"

    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.

    பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    (மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    தெலுங்கானாவில் மாலை 5 மணி நிலவரப்படி 63.94 சதவீத வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    சிஎன்என் நியூஸ் 18: பாஜக- 111, காங்கிரஸ்- 74, மற்றவை-14

    ஜன் கி பாத்: பாஜக 100- 122, காங்கிரஸ் 62- 85, மற்றவை 14- 15

    பி- மார்க்யூ: பாஜக 101- 125, காங்கிரஸ் 69- 81, மற்றவை 05- 15

    பால்ஸ்டிராட்: பாஜக 100- 110, காங்கிரஸ் 90- 100, மற்றவை 05-15

    டைம்ஸ் நவ்: பாஜக 108- 128, காங்கிரஸ் 56- 72, மற்றவை 13- 21

    இதையடுத்து, ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்திருந்தன.
    • மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 296 முதல் 326 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளும் தீவிரமாக உள்ளன. இதற்காக மாறுபட்ட கொள்கைகள் உடைய எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருங்கிணைந்து உள்ளன. அவர்களது கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் முதலில் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். பிறகு பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அடுத்து மும்பையில் இந்த மாத இறுதியில் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர்.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அடுத்தகட்ட நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதை முறியடிக்கும் வகையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது.

    டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி பேசுகையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அதற்கு மறுநாளே (16-ந்தேதி) புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:-

    பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடத்தினால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நாடு முழுவதும் மக்களிடம்கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சி அமைக்க மக்களிடம் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 296 முதல் 326 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறவும் வாய்ப்பு இருக்கிறது. என்றாலும், பா.ஜனதா கூட்டணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் சற்று சறுக்கல் என்றே சொல்ல வேண்டும்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 353 இடங்கள் கிடைத்திருந்தன. கருத்துக் கணிப்பில் 326 இடங்கள் கிடைக்கவே வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே 27 இடங்கள் குறையக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மக்களிடம் அதிகளவு ஆதரவு இல்லை என்பது கருத்துக்கணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடந்தால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மொத்தம் 160 முதல் 190 இடங்கள் கிடைக்கவே வாய்ப்புகள் உள்ளது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை விட அதிக ஆதரவு இருப்பதும் கருத்துக் கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களில் தற்போது தேர்தல் வைத்தால் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 57.2 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 30 முதல் 34 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 27.8 சதவீத வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த கூட்டணிக்கு 4 முதல் 8 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டு இருப்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. கூட்டணிக்கு 20 இடங்களிலும், இந்தியா கூட்டணிக்கு 10 இடங்களிலும் வெற்றி கிடைப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

    மகாராஷ்டிராவிலும், பீகாரிலும் பா.ஜ.க. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 16 முதல் 18 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அங்கு பா.ஜனதா மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வெற்றிகளை தவறவிட வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ராகுலின் இந்தியா ஒற்றுமை யாத்திரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பிரதமர் மோடியின் வளர்ந்த இந்தியா கோஷம் மக்களை கவர்ந்துள்ளது.

    இதன் காரணமாகவே இந்தி பேசும் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு 80 சதவீத வெற்றி விகிதம் இருப்பதை கருத்துக்கணிப்பில் தெரிந்து கொள்ள முடிந்தது. இதன் மூலம் தென் மாநிலங்களை விட வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.
    • நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது.

    கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

    இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது.

    43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.

    இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது. இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

    25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.

    இம்மாதம் நடந்த கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அக்கட்சியினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் வகையில் ராகுல் காந்தியின் செல்வாக்கும் கடந்த தேர்தலை விட தற்போது சற்று அதிகரித்து உள்ளது.

    ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரைக்கு பிறகு அவரது செல்வாக்கு 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. 55 சதவீத மக்கள் மத்திய அரசின் திட்டங்களில் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

    அடுத்த பிரதமராக யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதற்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரை தவிர மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு 4 சதவீதம் பேரும், உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவுக்கு 3 சதவீதம் பேரும், நிதிஷ் குமாருக்கு 1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த புதிய கருத்துக்கணிப்பின் மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் தொடர்ந்து புகழ்பெற்ற தலைவராக இருந்து வருவது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மோடி அலை ஆக்கிரமித்துள்ள போதிலும் ராகுல் காந்திக்கும் ஆதரவு அதிகரித்து இருப்பது அக்கட்சியினருக்கு புது தெம்பை கொடுத்து இருக்கிறது.

    • குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது.
    • இமாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

    புதுடெல்லி :

    குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகள் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து உள்ளன. குஜராத்தில் ஆம் ஆத்மியும் தங்கள் களத்தை தயார்படுத்தி வருகிறது.

    அரசியல் நோக்கர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் முக்கியமாக குஜராத்தில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இமாசல பிரதேசத்திலும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்து இருக்கிறது.

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 182 இடங்களில் ஆளும் பா.ஜனதா 135 முதல் 143 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. தற்போது 99 உறுப்பினர்களையே வைத்திருக்கும் அந்த கட்சி வருகிற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள் வரையும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    68 இடங்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் 37 முதல் 45 இடங்கள் வரை பா.ஜனதா பெறும் எனவும், காங்கிரசுக்கு 21 முதல் 29 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

    இரு மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மின்சாரம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடு முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

    இதை கடந்தும் பெருவாரியான வாக்காளர்கள் இரு மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

    கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி:- பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தி.மு.க. முந்தி இருக்கிறதே?

    பதில்:- தி.மு.க. முந்தி இருப்பதில் உங்களுக்கு சந்தோ‌ஷமா? இல்லையா? ஊடங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும், ஒரு வேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை.

    எங்களை பொறுத்தவரையில் கலைஞர் மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறார்கள். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப் போகிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    கேள்வி:- மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க தி.மு.க. தயாராக இருக்கிறதா?

    பதில்:- 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்கு பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன்.



    கேள்வி:- சந்திரபாபு நாயுடு உங்களிடம் பேசினாரா?

    பதில்:- அவர் பல நேரங்களில் பேசி தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து கருத்தை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?

    பதில்:- தேர்தல் முடிவு 23-ந்தேதி மாலை அல்லது இரவுக்கு பிறகுதான் தெரிய வரும். அது தெரிந்ததற்கு பிறகுதான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் பயன் உள்ளதாக இருக்கும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×