என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் சோகம் - சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விழுந்து 8 பேர் பலி
Byமாலை மலர்15 Oct 2019 10:09 AM GMT (Updated: 15 Oct 2019 10:09 AM GMT)
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்:
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமில்லி பகுதியில் இருந்து சிந்துரு பகுதிக்கு ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர்.
அதில் 25க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
வால்மீகி கொண்டா பகுதி அருகே வந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைகுலைந்த பேருந்து அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தனர்.
சுற்றுலா சென்ற பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X