என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு
Byமாலை மலர்28 Sep 2019 2:32 PM GMT (Updated: 28 Sep 2019 2:32 PM GMT)
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஆதார் திட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் ‘நிரந்தர கணக்கு எண்ணையும்’ (பான்) செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போதைய நிலையில், 120 கோடிக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணும், சுமார் 41 கோடி பேருக்கு ‘பான்’ எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 22 கோடி ‘பான்’ எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஆதார்-பான் எண்கள் இணைப்பை உறுதி செய்ய, பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X