search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBDT"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. #ElectionCommission #ITRaids
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின்  பிரமுகர்கள், வேட்பாளர்கள், தலைவர்கள் ஆகியோர் தேர்தல் பிரசாரம், வேட்பு மனு தாக்கல் போன்ற பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.  இதேப்போல் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கென தேர்தல் ஆணையமும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்கட்சி தலைவர்கள் வீடுகளிலும்,  நிறுவனங்களிலும் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகள் குறித்து , தேர்தல் நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, அமலாக்கத்துறையினை தவறாக பயன்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.




    இதையடுத்து வருவாய் செயலாளர் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் ஆகியோர், இந்த சோதனை குறித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. வருவாய் செயலாளர் ஏபி பாண்டே மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் பிசி மோடி ஆகியோர் இந்த சோதனைகளின் முழு விவரங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    இதற்கிடையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 281 கோடி பணம் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறையினர் நேற்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ElectionCommission #ITRaids
    மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர், கணக்கு தாக்கலின்போது செய்த சிறுசிறு தவறுகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. #CBDT #TDS #Notice #IncomeTax
    புதுடெல்லி:

    மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர், கணக்கு தாக்கலின்போது செய்த சிறுசிறு தவறுகளுக்கு கூட ஒட்டுமொத்தமாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு வருமான வரித்துறையை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று விளக்கம் அளித்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வருமான வரிக்காக ஊழியர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள், அந்த வரியை உரிய நேரத்தில் வருமான வரித்துறையிடம் செலுத்தாமல் இருப்பது குற்றம் ஆகும். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சுயநல நிறுவனங்கள், தங்கள் மீதான நடவடிக்கையை தடுப்பதற்காக திட்டமிட்டு இத்தகைய வதந்திகளை பரப்பி வருகின்றன.

    ரூ.5 லட்சத்துக்கு மேல், வரி பிடித்தம் செய்யப்பட்டு, அது வருமான வரித்துறையிடம் ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, மும்பையில் உள்ள வருமான வரி டி.டி.எஸ். அலுவலகம் கடந்த ஒரு மாதத்தில் பெரிய அளவிலான 50 வரி ஏய்ப்புகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவை எல்லாமே ரூ.5 லட்சத்துக்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாதது தொடர்பானவை.

    இதுதவிர, ரூ.50 கோடிக்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாத 4 பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இப்படி வரியை செலுத்தாமல் இருப்பது, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் நலன்களையும் பாதிக்கும். எனவே, இத்தகைய சட்டரீதியான நடவடிக்கையை கூட மாத சம்பளதாரர்களை துன்புறுத்தும் நடவடிக்கை என்று திசைதிருப்ப முயல்வது துரதிருஷ்டவசமானது.

    சுமார் 6 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்படும் நாட்டில், நடப்பு நிதியாண்டில் 1,400 வழக்குகள் மட்டுமே தொடரப்பட்டுள்ளன. எனவே, எப்படி பார்த்தாலும், இதை ஒட்டுமொத்தமாக துன்புறுத்தும் நடவடிக்கையாக கருத முடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CBDT #TDS #Notice #IncomeTax
    ×