என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இருந்து திரும்பிய 9 இளைஞர்கள் சாலை விபத்தில் பலி
Byமாலை மலர்25 Sep 2019 6:00 AM GMT
அரியானா மாநிலத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்று திரும்பிய 9 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகினர்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் நகரில் நேற்று ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட 9 பேர் ஆட்டோவில் வீடு திரும்பினர். ஜிண்ட்-ஹிசார் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சென்ற ஆட்டோ மீது, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி ஒன்று மோதியது. இதில் ஆட்டோ முழுவதும் நசுங்கியது. ஆட்டோவில் பயணித்த டிரைவர் உள்பட 10 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களது பைகளில் இருந்த ஆவணங்கள் மூலம் அவர்கள் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்கள் என தெரியவந்தது. அவர்களில் 5 பேர் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X