என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாயாவதியின் முன்னாள் செயலாளரின் ரூ.230 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல்
Byமாலை மலர்24 Sep 2019 3:51 PM GMT (Updated: 24 Sep 2019 3:51 PM GMT)
உத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி மாயாவதியின் முன்னாள் செயலாளரின் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.
புதுடெல்லி:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் மாயாவதி. இவரது செயலாளராக பதவி வகித்தவர் நெட் ராம்.
கடந்த 2002-2003ம் ஆண்டில் மாயாவதி முதல் மந்திரியாக இருந்தபொழுது அவருக்கு செயலாளராக இருந்தவர் நெட் ராம். கலால் துறை தலைவர், சர்க்கரை தொழிற்சாலை மற்றும் கரும்பு துறை, உணவு வழங்கல் துறை உள்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் இவர் இருந்துள்ளார்.
இந்நிலையில், மாயாவதியின் முன்னாள் செயலாளர் நெட் ராமின் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது. டெல்லி, நொய்டா, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள சுமார் 19 அசையா சொத்துக்களும் இதில் அடங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X