என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் தொண்டரின் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்த ராகுல் காந்தி
Byமாலை மலர்31 Aug 2019 5:11 AM GMT (Updated: 31 Aug 2019 5:11 AM GMT)
வயநாட்டில் இளைஞர் காங்கிரஸ் தொண்டரின் குழந்தைக்கு சாக்லெட் கொடுத்த ராகுல் காந்தி கைகளில் தூக்கி வைத்து கொஞ்சினார்.
திருவனந்தபுரம்:
வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தங்கி இருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கினார்.
27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வயநாடு, மானந்தவாடி, புத்துமலை, சுல்தான்பத்தேரி, மலப்புரம், தாமஸ்நகர் உள்பட மலைக் கிராமங்கள் முழுவதும் சுற்றி வந்த ராகுல்காந்தி, நேற்று பிற்பகல் டெல்லி திரும்பினார்.
ராகுல்காந்தி பொதுமக்களை சந்தித்தபோது பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்று அவர்களோடு கை குலுக்கி கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். விவசாயிகள் பலர் ராகுலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த சம்பவங்களும் நடந்தது.
ராகுல்காந்தி நேற்று கோழிக்கோடு வழியாக டெல்லி செல்ல இருந்தார். இதற்காக காரில் சென்றபோது வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை கை அசைத்து வழி அனுப்பினர். அந்த கூட்டத்தில் தொண்டர் ஒருவரின் தோளில் சிறுவன் ஒருவன் அமர்ந்தபடி ராகுலை நோக்கி கை அசைத்தான்.
குழந்தையை பார்த்த ராகுல் காரை நிறுத்தி அந்த குழந்தையின் அருகில் சென்றார். அந்த குழந்தையை கைகளில் வாங்கி மார்போடு அணைத்து கொஞ்சினார். பின்னர் அந்த குழந்தைக்கு சாக்லெட்டும் கொடுத்தார்.
அந்த குழந்தை யார் என விசாரித்தபோது, அது வயநாடு தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாமஸ் என்பவரின் குழந்தை என்பதை அறிந்து கொண்டார். தாமஸ் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். என்றாலும் ராகுல்காந்தி வந்திருப்பதை அறிந்து தாமசின் குழந்தையை அவரது உறவினர் அழைத்து வந்திருந்தது தெரிய வந்தது.
வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல்காந்தி கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தங்கி இருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார். மேலும் நிவாரண முகாம்களில் தங்கி இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண பொருட்களும் வழங்கினார்.
27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வயநாடு, மானந்தவாடி, புத்துமலை, சுல்தான்பத்தேரி, மலப்புரம், தாமஸ்நகர் உள்பட மலைக் கிராமங்கள் முழுவதும் சுற்றி வந்த ராகுல்காந்தி, நேற்று பிற்பகல் டெல்லி திரும்பினார்.
ராகுல்காந்தி பொதுமக்களை சந்தித்தபோது பாதுகாப்பு வளையத்தை தாண்டி சென்று அவர்களோடு கை குலுக்கி கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். விவசாயிகள் பலர் ராகுலை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த சம்பவங்களும் நடந்தது.
ராகுல்காந்தி நேற்று கோழிக்கோடு வழியாக டெல்லி செல்ல இருந்தார். இதற்காக காரில் சென்றபோது வழிநெடுக காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை கை அசைத்து வழி அனுப்பினர். அந்த கூட்டத்தில் தொண்டர் ஒருவரின் தோளில் சிறுவன் ஒருவன் அமர்ந்தபடி ராகுலை நோக்கி கை அசைத்தான்.
குழந்தையை பார்த்த ராகுல் காரை நிறுத்தி அந்த குழந்தையின் அருகில் சென்றார். அந்த குழந்தையை கைகளில் வாங்கி மார்போடு அணைத்து கொஞ்சினார். பின்னர் அந்த குழந்தைக்கு சாக்லெட்டும் கொடுத்தார்.
அந்த குழந்தை யார் என விசாரித்தபோது, அது வயநாடு தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாமஸ் என்பவரின் குழந்தை என்பதை அறிந்து கொண்டார். தாமஸ் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். என்றாலும் ராகுல்காந்தி வந்திருப்பதை அறிந்து தாமசின் குழந்தையை அவரது உறவினர் அழைத்து வந்திருந்தது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X