என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் கடந்த 8 மாதங்களில் 564 விவசாயிகள் தற்கொலை
Byமாலை மலர்27 Aug 2019 7:14 AM GMT (Updated: 27 Aug 2019 7:14 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை மொத்தம் 564 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அவுரங்காபாத்:
வறட்சி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 26 தேதி வரை மொத்தம் 564 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என பிரதேச ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 131 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். 564 விவசாயிகள் தற்கொலை வழக்குகளில் 415 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூ. 4.1 கோடி தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சரியான காரணங்கள் இல்லாததால் 103 பேரின் குடும்பங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மிகக்குறைவான மழைப்பொழிவு, உரம் பற்றாக்குறை பிரச்சனை மற்றும் கடன் தொல்லை போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மேலும் குறைவான மழைப்பொழிவு காரணமாக அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன” என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X