என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலான முடிவு - பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி பாராட்டு
Byமாலை மலர்5 Aug 2019 10:33 AM GMT (Updated: 5 Aug 2019 10:33 AM GMT)
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த வரலாற்று சிறப்புக்குரிய துணிச்சலான முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுவதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பிஜு ஜனதா தளம், அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அத்வானி, 'இந்த முடிவு நாட்டை ஒருமைப்படுத்தும் துணிச்சலான நடவடிக்கையாகும். இந்த வரலாற்று சிறப்புக்குரிய முடிவை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை பாராட்டுகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள மக்களின் அமைதி, வளம் மற்றும் மேம்பாட்டுக்காக பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பிஜு ஜனதா தளம், அ.தி.மு.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், வரலாற்று சிறப்புக்குரிய துணிச்சலான முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுவதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான அத்வானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அத்வானி, 'இந்த முடிவு நாட்டை ஒருமைப்படுத்தும் துணிச்சலான நடவடிக்கையாகும். இந்த வரலாற்று சிறப்புக்குரிய முடிவை எடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை பாராட்டுகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள மக்களின் அமைதி, வளம் மற்றும் மேம்பாட்டுக்காக பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X