என் மலர்

    நீங்கள் தேடியது "Kashmir issue"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார்.
    • ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    புதுடெல்லி :

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தனது 'டுவிட்டர்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். இது, 1947-ம் ஆண்டு ஜூன் மாதமே நேருவுக்கு தெரியும். அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இதை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தபோது, தவறான சட்டப்பிரிவின்கீழ் நேரு ஐ.நா.வை அணுகினார். அதனால், பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளராக இல்லாமல், ஒரு வாதியாக பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. காஷ்மீரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்துவது சரிதான் என்ற மாயையை நேரு தோற்றுவித்தார். 370-வது அரசியல் சட்டப்பிரிவை உருவாக்கினார்.

    மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரன்சிங், வரலாற்றை திரித்து, நேருவை பழியில் இருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தார். பொய்யான வரலாற்றை புறந்தள்ளி, அப்போது என்ன நடந்தது என்பதை காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு பிறகு பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு வாலிபர் உயிரிழந்தார். KashmirClashes #JKEid
    ஸ்ரீநகர்:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திறந்த வெளி தொழுகையும் நடைபெற்றது. காஷ்மீரில் பதற்றத்திற்கு மத்தியில் பொதுமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் போராட்டக் காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டதால் அமைதியற்ற சூழல் காணப்பட்டது.

    ஆனந்த்நாக் மாவட்டம் பிரக்போராவில் ரம்ஜான் தொழுகையை அடுத்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினரை நோக்கி இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். பாதுகாப்பு படையினரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.

    இந்த மோதலில் ஷீரஜ் அகமது என்ற வாலிபர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதேபோல் சபாகதல், சோபோர், குப்வாரா பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தை முன்னிட்டு பயங்கரவாத வேட்டையை பாதுகாப்பு படை நிறுத்தியது. எல்லையிலும் சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும் பயங்கரவாதிகள் தரப்பில் அவ்வப்போது தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். #KashmirClashes #JKEid

    ×