search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீர் பிரச்சினையில் நேரு செய்த தவறுகள்: மத்திய சட்ட மந்திரி கடும் தாக்கு
    X

    காஷ்மீர் பிரச்சினையில் நேரு செய்த தவறுகள்: மத்திய சட்ட மந்திரி கடும் தாக்கு

    • காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார்.
    • ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    புதுடெல்லி :

    மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, ஒரு செய்தி சேனல் இணையதளத்தில் முன்னாள் பிரதமர் நேரு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்த கருத்தை தனது 'டுவிட்டர்' பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரை ஆண்ட மகாராஜா ஹரிசிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க விரும்பினார். இது, 1947-ம் ஆண்டு ஜூன் மாதமே நேருவுக்கு தெரியும். அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் நேரு இதை தெரிவித்துள்ளார். ஆனாலும், ஹரிசிங்கின் விருப்பத்தை ஒரு முறை அல்ல, 3 முறை நேரு நிராகரித்தார்.

    காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்தபோது, தவறான சட்டப்பிரிவின்கீழ் நேரு ஐ.நா.வை அணுகினார். அதனால், பிரச்சினையில் ஆக்கிரமிப்பாளராக இல்லாமல், ஒரு வாதியாக பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. காஷ்மீரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்துவது சரிதான் என்ற மாயையை நேரு தோற்றுவித்தார். 370-வது அரசியல் சட்டப்பிரிவை உருவாக்கினார்.

    மகாராஜா ஹரிசிங்கின் மகன் கரன்சிங், வரலாற்றை திரித்து, நேருவை பழியில் இருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தார். பொய்யான வரலாற்றை புறந்தள்ளி, அப்போது என்ன நடந்தது என்பதை காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×