என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமா? - மத்திய அரசு விளக்கம்
Byமாலை மலர்31 July 2019 3:08 AM GMT (Updated: 31 July 2019 3:08 AM GMT)
ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:
‘கட்டாய ஓய்வு’ என்ற பெயரில் ரெயில்வே ஊழியர்களில் கணிசமானோரை ஆள்குறைப்பு செய்ய ரெயில்வே நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. அதற்கு விளக்கம் அளிக்கும்வகையில், ரெயில்வே அமைச்சகம், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை, ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 262 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 637 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 60 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதுதொடர்பான இதர பணிகள் 2 மாதங்களில் முடிவடையும்.
பணிநடத்தை விதிகளின்படி, ரெயில்வே ஊழியர்களின் பணித்திறனை வழக்கம்போல் ஆய்வு செய்து வருமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் வழக்கமான நடவடிக்கைதான்.
இவை, ரெயில்வே ஸ்தாபன சட்டம் வகுத்த விதிமுறை ஆகும். பொதுநலன் கருதி, இந்த ஆய்வை ரெயில்வே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுகளிலும் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மற்றபடி, ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் ஏதும் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவல், அடிப்படை ஆதாரமற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘கட்டாய ஓய்வு’ என்ற பெயரில் ரெயில்வே ஊழியர்களில் கணிசமானோரை ஆள்குறைப்பு செய்ய ரெயில்வே நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியானது. அதற்கு விளக்கம் அளிக்கும்வகையில், ரெயில்வே அமைச்சகம், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை, ரெயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 262 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 637 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 60 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதுதொடர்பான இதர பணிகள் 2 மாதங்களில் முடிவடையும்.
மேலும், ரெயில்வே ஊழியர்களில் 55 வயதை கடந்தவர்களையும், 30 வருடம் பணி முடித்தவர்களையும் அடையாளம் காணுமாறு அனைத்து ரெயில்வே மண்டலங்களுக்கும், ரெயில்வே உற்பத்தி கூடங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பணிநடத்தை விதிகளின்படி, ரெயில்வே ஊழியர்களின் பணித்திறனை வழக்கம்போல் ஆய்வு செய்து வருமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் வழக்கமான நடவடிக்கைதான்.
இவை, ரெயில்வே ஸ்தாபன சட்டம் வகுத்த விதிமுறை ஆகும். பொதுநலன் கருதி, இந்த ஆய்வை ரெயில்வே மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுகளிலும் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மற்றபடி, ரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்யும் திட்டம் ஏதும் இல்லை. இதுதொடர்பாக வெளியான தகவல், அடிப்படை ஆதாரமற்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X