search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படையினர்
    X
    பாதுகாப்பு படையினர்

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்

    பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்துக்குட்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் எஸ்.எம்.புரா எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து  ஒருவன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை கண்ட பாதுகாப்பு படையினர் திரும்பிச் செல்லும்படி எச்சரித்தனர்.

    எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி (கோப்புப்படம்)

    ஆனால், எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முன்னேறி வந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 
    Next Story
    ×