என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைந்தது
Byமாலை மலர்11 July 2019 5:06 AM GMT (Updated: 11 July 2019 5:10 AM GMT)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இடுக்கியில் இயல்பை காட்டிலும் 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. முதலில் தீவிரம் காட்டிய மழை அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் வாயு புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை பெய்வதில் அது பாதிப்பை உண்டாக்கியது.
இது போன்ற காரணங்களால் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று (10-ந்தேதி) வரை பெய்த தென்மேற்கு பருவமழையை வைத்து பார்க்கும்போது இது சராசரியை விட 43 சதவீதம் குறைவான மழைப்பொழிவு என்பது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்திலேயே மிகவும் குறைவாக மழை பெய்துள்ள இடம் இடுக்கியாகும். இங்கு 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் சராசரியாக 394.5 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இதுவரை 302.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
இது இயல்பை காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அதே போல வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதம் மழை குறைந்துள்ளது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 8-ந்தேதி தொடங்கியது. முதலில் தீவிரம் காட்டிய மழை அதன் பிறகு படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் வாயு புயல் உருவானதால் தென்மேற்கு பருவமழை பெய்வதில் அது பாதிப்பை உண்டாக்கியது.
இது போன்ற காரணங்களால் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் நேற்று (10-ந்தேதி) வரை பெய்த தென்மேற்கு பருவமழையை வைத்து பார்க்கும்போது இது சராசரியை விட 43 சதவீதம் குறைவான மழைப்பொழிவு என்பது தெரிய வந்துள்ளது.
வழக்கமாக இந்த கால கட்டத்தில் 890.9 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 510.2 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது.
கேரள மாநிலத்திலேயே மிகவும் குறைவாக மழை பெய்துள்ள இடம் இடுக்கியாகும். இங்கு 56 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் சராசரியாக 394.5 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இதுவரை 302.4 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.
இது இயல்பை காட்டிலும் 23 சதவீதம் குறைவாகும். அதே போல வயநாடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதம் மழை குறைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X