என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜினாமா முடிவில் உறுதி- ராகுல் காந்தி வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் போராட்டம்
Byமாலை மலர்26 Jun 2019 6:52 AM GMT (Updated: 26 Jun 2019 6:52 AM GMT)
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதால், அவரது வீட்டின் முன் இளைஞர் காங்கிரசார் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை.
இதையடுத்து ராகுல் காந்தியின் வீட்டின் முன் ஏராளமான இளைஞர் காங்கிரசார் திரண்டு போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்துகொண்டனர். அப்போது, ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி அவர்களுக்கு பிடி கொடுக்கவில்லை என தெரிகிறது. ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராகுல் காந்தியின் வீட்டின் முன் ஏராளமான இளைஞர் காங்கிரசார் திரண்டு போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X