என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை மழைப்பொழிவு 39 சதவீதம் குறைவு
Byமாலை மலர்23 Jun 2019 1:26 PM GMT (Updated: 23 Jun 2019 1:26 PM GMT)
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி வரை பெய்த மழையை விட இந்த ஆண்டில் நேற்று வரை பெய்துள்ள மழைப்பொழிவு 39.3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி:
புவி வெப்ப மயமாதல் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த காரணங்களால் இனிவரும் காலங்களில் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் மழை குறைவினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதற்கேற்ப, இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் வருடாந்திர மழைப்பொழிவு மிகவும் குறைந்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதிவரை பெய்த மழையை விட இந்த ஆண்டில் நேற்று வரை பெய்துள்ள மழைப்பொழிவு 39 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஜூன் முதல் தேதியில் இருந்து 22-ம் தேதி வரை நாடு முழுவதும் 107.1 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டின் இதே மாதம் மற்றும் தேதியின்படி மழைப்பொழிவு 39.3 சதவீதம் குறைந்து 65 மில்லிமீட்டர் என்ற அளவில்தான் உள்ளது என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X