என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்
Byமாலை மலர்16 Jun 2019 7:11 AM GMT (Updated: 16 Jun 2019 8:03 AM GMT)
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை 2வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.
இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 38-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சனைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், மேலவை பா.ஜ.க. தலைவர் தவார் சந்த் கெலாட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், அவையை எப்படி சுமூகமுடன் கொண்டு செல்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X