என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன - சோனியா காந்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்13 Jun 2019 6:58 AM GMT (Updated: 13 Jun 2019 7:52 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசம்:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டனி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு மூன்று நாள் சுற்று பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதில் பேசிய சோனியா காந்தி கூறியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என்ற எண்ணம் நாட்டில் உள்ள அனைத்து மக்கள் உள்ளத்திலும் வேரூன்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய தேர்தல் நடைமுறை மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கும் விதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X