search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு - வாழ்த்தியவர்களுக்கு ராகுல் நன்றி
    X

    காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று ஓராண்டு நிறைவு - வாழ்த்தியவர்களுக்கு ராகுல் நன்றி

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். #buildingstrongCongress #vibrantCongress #RahulGandhi
    புதுடெல்லி:

    அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக 16-12-017 அன்று ராகுல் காந்தி பதவி ஏற்று கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் சூறாவளியாக சுழன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றியை தேடி தந்தார்.

    காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது பணிக்கும் 3 மாநில தேர்தல் வெற்றிக்கும் ஏராளமானவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவராக ஓராண்டை நிறைவு செய்யும் இந்நாளில், நமது கட்சியை வலிமையாகவும், ஒற்றுமையாகவும், வீரியம் மிக்கதாகவும் மாற்ற மீண்டும் உறுதி ஏற்கிறேன்.

    எனக்கு இன்று வாழ்த்து தெரிவித்து வந்துகொண்டிருக்கும் வாழ்த்து செய்திகளை கண்டு பிரமிப்பு அடைகிறேன். உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும், உங்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாகவும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ராகுல் குறிப்பிட்டுள்ளார். #buildingstrongCongress #vibrantCongress #RahulGandhi
    Next Story
    ×