search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம் செய்துகொண்டால் ராகுல்காந்தியை கட்டி அணைக்க தயார் - பா.ஜ.க எம்.பி
    X

    திருமணம் செய்துகொண்டால் ராகுல்காந்தியை கட்டி அணைக்க தயார் - பா.ஜ.க எம்.பி

    ஓரினச் சேர்க்கை குற்றமாக கருதப்படும் நிலையில் திருமணம் முடிந்தவராக இருந்தால் ராகுல் காந்தியை கட்டி அணைக்க நாங்கள் தயார் என பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளார். #BJP #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தனது காரசாரமான விவாதத்தை நிறைவு செய்த பின்னர், பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டியணைத்தார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மோடியின் பாணியிலேயே அவருக்கு பதிலடி கொடுக்க விரும்பியதால் தான் கட்டி அணைத்ததாக ராகுல் காந்தி தனி விளக்கமும் அளித்திருந்தார்.

    இதையடுத்து, நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நான் கட்டிப்பிடித்துவிடுவேன் என அஞ்சி பா.ஜ.க எம்.பி.க்கள் என்னைக் கண்டால் 2 அடி பின்னால் செல்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியை கட்டி அணைத்தால் எங்கள் மனைவிகள் எங்களை விவாகரத்து  செய்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    மேலும், ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377-வது சட்டப் பிரிவு இன்னும் கைவிடப்படவில்லை எனவும், முதலில் ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ளட்டும், பிறகு தங்களை கட்டி அணைக்கலாம் எனவும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் மீதான இந்த விமர்சனம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. #BJP #RahulGandhi
    Next Story
    ×