search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தர பிரதேசத்தில் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது அரசு
    X

    உத்தர பிரதேசத்தில் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது அரசு

    உத்தர பிரதே சமாநிலத்தில் ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. #UPPlasticBan
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கும்படி அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. முழுமையாக இதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில், மீண்டும் 2017ம் ஆண்டு அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகர்ப்புறங்களில் பிளாஸ்டிக் புழக்கத்தையும், பயன்பாட்டையும் அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாரபங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த தடை உத்தரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.


    ‘மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நமது இலக்கை எட்டுவதற்கு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்று யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த மாதம் 23-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் தடை செய்ப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முதல் முறை மீறுவோருக்கு 5000 ரூபாயும், இரண்டாவது முறை மீறுவோருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறுசெய்யும்பட்சத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையைப் பின்பற்றி உ.பி. அரசும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UPPlasticBan
    Next Story
    ×