search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக - ஆட்சி கவிழ்ந்தது
    X

    காஷ்மீரில் மெகபூபா அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக - ஆட்சி கவிழ்ந்தது

    ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த பாஜக, இன்று கூட்டணியில் இருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. #Kashmir #BJPDumpsPDP
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிடிபி கட்சி - பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. பிடிபி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த நிர்மல் சிங் பொறுப்பேற்றார். முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    பல்வேறு விவகாரங்களில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அம்மாநில கட்சி தலைவர், பாஜக மந்திரிகளுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக்கு பின்னர், அக்கட்சியில் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் பிடிபி கூட்டணி ஆட்சியில் இருந்து பாஜக விலகுவதாக அவர் அறிவித்தார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதால் அம்மாநிலத்தில் ஆட்சி கலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    87 இடங்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையான 44 இடங்கள் யாருக்கும் இல்லை. பிடிபி 28 இடங்கள், பாஜக 25 இடங்கள், தேசிய மாநாட்டுக்கட்சி 15 இடங்கள், காங்கிரஸ் 12 மற்றும் இதர கட்சிகள் 7 இடங்களை வைத்துள்ளன.
    Next Story
    ×