என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காணாமல் போனவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ‘யுடியூப்’ உதவியால் மீட்பு
Byமாலை மலர்18 April 2018 12:20 AM GMT (Updated: 18 April 2018 12:20 AM GMT)
காணாமல் போய் 40 ஆண்டுகள் கழித்து ‘யுடியூப்’ உதவியால் கோம்தான் சிங் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்த்தியுள்ளது.
மும்பை:
மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்தவர் கோம்தான் சிங். கடந்த 1978-ம் ஆண்டு, தன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 26. அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. 40 ஆண்டுகள் கழித்து, ‘யுடியூப்’ உதவியால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது 66 வயதாகும் அவர், மும்பையில் நரைத்த தாடி, மீசையுடன் பழைய இந்திப்பாடல்களை பாடி வந்தார். அவரை பெரோஸ் ஷாகிர் என்ற புகைப்படக்காரர் கவனித்தார். அவரைப்பற்றி அறிந்து கொண்டார். அவரை பாட வைத்து வீடியோ எடுத்த அவர், அதை ‘யுடியூப்’ பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோவை மணிப்பூரில் கோம்தான் சிங்கின் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து விட்டு, அதை கோம்தான் சிங்கின் குடும்பத்தினரிடம் காட்டினார். இன்ப அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இம்பால் போலீசிடம் முறையிட்டனர். இம்பால் போலீசார், மும்பை போலீசாரை தொடர்பு கொண்டனர். கோம்தான் சிங்கின் இளவயது படத்தை அனுப்பி வைத்தனர்.
அப்படத்தை வைத்து, மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்தில் கோம்தான் சிங்கை போலீசார் அடையாளம் கண்டனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன், மணிப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்தவர் கோம்தான் சிங். கடந்த 1978-ம் ஆண்டு, தன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 26. அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. 40 ஆண்டுகள் கழித்து, ‘யுடியூப்’ உதவியால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது 66 வயதாகும் அவர், மும்பையில் நரைத்த தாடி, மீசையுடன் பழைய இந்திப்பாடல்களை பாடி வந்தார். அவரை பெரோஸ் ஷாகிர் என்ற புகைப்படக்காரர் கவனித்தார். அவரைப்பற்றி அறிந்து கொண்டார். அவரை பாட வைத்து வீடியோ எடுத்த அவர், அதை ‘யுடியூப்’ பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோவை மணிப்பூரில் கோம்தான் சிங்கின் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து விட்டு, அதை கோம்தான் சிங்கின் குடும்பத்தினரிடம் காட்டினார். இன்ப அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இம்பால் போலீசிடம் முறையிட்டனர். இம்பால் போலீசார், மும்பை போலீசாரை தொடர்பு கொண்டனர். கோம்தான் சிங்கின் இளவயது படத்தை அனுப்பி வைத்தனர்.
அப்படத்தை வைத்து, மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்தில் கோம்தான் சிங்கை போலீசார் அடையாளம் கண்டனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன், மணிப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X