search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவலர் காயம்
    X

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவலர் காயம்

    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் போலீஸ் காவலர் ஒருவர் காயமடைந்தார். #JammuKashmir #Policemaninjured #militantattack

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் போலீஸ் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் அமைந்துள்ள சவுரா பகுதியில் இன்று மாலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காவலர் படுகாயமடைந்தார்.

    உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    இதேபோன்று நவ்ஷேரா பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது இன்று மாலை 4:45 மணியிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எந்தவித உயிர்சேதமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

    முன்னதாக இன்று காலை பத்காம் நகரில் உள்ள ஒரு வழிபாட்டு தளம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸ் காவலர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Policemaninjured #militantattack #tamilnews
    Next Story
    ×