என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கேரளாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக என்ஜினீயரிங் மாணவர் ஆற்றில் மூழ்கினார்
Byமாலை மலர்11 Sep 2017 11:54 AM GMT (Updated: 11 Sep 2017 11:54 AM GMT)
கேரளாவுக்கு சுற்றுலா வந்த இடத்தில் மாணவர் ஆற்றில் மூழ்கியதால் அவரது நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கேரள மாநிலம் எங்கும் மீண்டும் பசுமை தழைக்க தொடங்கி விட்டது.
இதை தொடர்ந்து கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிகளவு வருகை தர தொடங்கிவிட்டனர். அங்குள்ள அருவிகள், ஆறுகள், கடற்கரை என்று சுற்றுலா தலங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 30 பேர் மற்றும் பேராசிரியர்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள காஞ்சிரம்குளம் பகுதியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
இந்த இடம் ஆறும், கடலும் சங்கமிக்கும் பகுதியாகும். தற்போது இந்த ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இந்த ஆற்றில் மாணவர்கள் இறங்கி ஆனந்த குளியலிட்டனர்.
அப்போது சங்ககிரியை சேர்ந்த கவுதம் (வயது 20) என்ற மாணவர் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் அந்த மாணவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவர் கவுதம் ஆற்றில் மூழ்கிவிட்டார்.
இதுபற்றி போலீசாருக்கும், கடலோர காவல்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவர் கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வந்த இடத்தில் மாணவர் கவுதம் ஆற்றில் மூழ்கியதால் அவரது நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதுபற்றி அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கேரள மாநிலம் எங்கும் மீண்டும் பசுமை தழைக்க தொடங்கி விட்டது.
இதை தொடர்ந்து கேரளாவுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிகளவு வருகை தர தொடங்கிவிட்டனர். அங்குள்ள அருவிகள், ஆறுகள், கடற்கரை என்று சுற்றுலா தலங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ஒரு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 30 பேர் மற்றும் பேராசிரியர்கள் திருவனந்தபுரம் அருகே உள்ள காஞ்சிரம்குளம் பகுதியில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
இந்த இடம் ஆறும், கடலும் சங்கமிக்கும் பகுதியாகும். தற்போது இந்த ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இந்த ஆற்றில் மாணவர்கள் இறங்கி ஆனந்த குளியலிட்டனர்.
அப்போது சங்ககிரியை சேர்ந்த கவுதம் (வயது 20) என்ற மாணவர் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் அந்த மாணவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவர் கவுதம் ஆற்றில் மூழ்கிவிட்டார்.
இதுபற்றி போலீசாருக்கும், கடலோர காவல்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவர் கவுதமை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா வந்த இடத்தில் மாணவர் கவுதம் ஆற்றில் மூழ்கியதால் அவரது நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதுபற்றி அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X