search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி: நின்று கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி 6 பேர் பலி
    X

    உ.பி: நின்று கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி 6 பேர் பலி

    உத்தரப்பிரதேசம் மாநிலம் யமுனா விரைவுச்சாலையில் நின்று கொண்டிந்த கார் மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் யமுனா விரைவுச்சாலையில் நின்று கொண்டிந்த கார் மீது பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் மிதாவாலி என்ற கிராமத்தின் அருகே வழியே செல்லும் யமுனா அதிவிரைவுச் சாலையில் இன்று காலை 2 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடுபத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் கார் ஓட்டுநர், காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு வெளியே நின்றுள்ளனர்.

    அதே நேரத்தில் அந்த வழியே சென்ற பேருந்தானது காரின் மீது எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இதில், காருக்கு வெளியே நின்று கொண்டிருந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பலியானவர்களின் உடல்களை பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×