என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆமதாபாத் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது
Byமாலை மலர்24 May 2017 11:21 PM GMT (Updated: 24 May 2017 11:21 PM GMT)
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கேரளாவில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆமதாபாத்:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி, 21 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.
இதில் 56 பேர் கொல்லப்பட்டதோடு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சிமி இயக்கம் உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றன.
இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முப்தி அபு பசீர் உள்ளிட்ட 2 பேரை குஜராத் போலீசார் ஏற்கனவே கைதுசெய்தனர். மேலும் மற்றொரு முக்கிய குற்றவாளியான சுஹைப் பட்டானிக்கல் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சுஹைப் பட்டானிக்கலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சுஹைப் பட்டானிக்கல் சிமி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும், ஆமதாபாத் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி, 21 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.
இதில் 56 பேர் கொல்லப்பட்டதோடு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சிமி இயக்கம் உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றன.
இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முப்தி அபு பசீர் உள்ளிட்ட 2 பேரை குஜராத் போலீசார் ஏற்கனவே கைதுசெய்தனர். மேலும் மற்றொரு முக்கிய குற்றவாளியான சுஹைப் பட்டானிக்கல் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சுஹைப் பட்டானிக்கலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சுஹைப் பட்டானிக்கல் சிமி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும், ஆமதாபாத் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X