என் மலர்
இந்தியா
- லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன்.
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் கடைசி வரை தொகுதி பங்கீடு செய்யவில்லை.
இதனால் குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் விரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப்பின் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன். தற்போதுள்ள சூழ்நிலை குறித்து மீடியாக்களுக்கு தெரிவிக்க நாளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
இந்தியா கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. மீடியாக்களில் என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, அது சரியானது அல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான போட்டி ஐந்து முதல் ஏழு தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதை வேறுவிதமான எடுத்துக் கொள்ளக் கூடாது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் விரைவில் தேர்தல் பிரசாரத்தை இணைந்து தொடங்குவார்கள். பீகாரில் 243 இடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் நட்பு ரீதியிலான போட்டி நிகழ்ந்துள்ளது. மகாகூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக ஒன்றுமையாக போட்டியிடும்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
- பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்.
- ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக, சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பம்பையில் இருந்து குடியரசுத் தலைவர் புறப்பட இருந்த நிலையில், அப்பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் அவர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
- டிரம்பிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம்.
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டார்.
இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறும்போது," ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகவும் மேலும் கொள்முதலை குறைக்கும்" என்றார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணெய் வாங்க போவதில்லை என்று டிரம்ப் மீண்டும் கூறியதற்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மோடி மறைப்பதை டிரம்ப் வெளிப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி இறுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். டிரம்ப் தனக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்ததாக மட்டுமே கூறினார். ஆனால் மோடி எதை மறைத்தாலும், டிரம்ப் வெளிப்படுத்துகிறார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறித்து பேசிய தாகவும் இந்த இறக்குமதி நிறுத்தப்படும் என்று அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். டிரம்ப் இந்தியாவின் கொள்கையை அறிவிப்பது கடந்த 6 நாட்களில் இது 4-வது முறையாகும்.
முதலில் டிரம்ப்பிடம் இருந்து ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களைப் பெற்றோம். இப்போது அவரிடமிருந்து ரஷிய எண்ணெய் பற்றிய தகவல்களையும் பெறுகிறோம். பிரதமர் மோடி எதை மறைக்கிறார்? அவர் எந்த அழுத்தத்தில் இருக்கிறார்? அவர் எதற்கு பயப்படுகிறார்? ஹவ்டி மோடி-நமஸ்தே டிரம்ப் முற்றிலும் கெட்டுப்போனது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
- நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாதாசாகேப் விருது பெற்ற மலையுல உலகின் சூப்பர் ஸ்டாரும் பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்த விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் அவர் இணைந்துள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
- பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.
சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார்.
- யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா. இவர் தனது தங்கையை தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் என கூறி வந்தார்.இந்த நிலையில் யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்கு வந்திருந்தார்.
தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார். அப்போது தனது தங்கையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்தார். எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியபடி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து யோகேஷின் மர்ம உறுப்பை வெட்டி வீசி எறிந்தார்.
யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
- ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது.
திருவனந்தபுரம்:
ஐனாதிபதி திரவுபதி முர்மு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக இருந்தது. அப்போது எல்லையில் நிலவிய போர் பதற்றம் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் அவர் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கி வந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலைக்கு புறப்பட்டார்.

ஜனாதிபதி ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக பிரமடம் மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது. அந்த தளத்தில் நேற்று வரை கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு இருக்கிறது. அதில் தான் ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கி சரிந்ததாக தெரிகிறது.
ஜனாதிபதி வருகைக்காக நேற்று அனைத்துவிதமான ஒத்தகைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில் ஹெலிகாப்டர் தளத்தின் கான்கிரீட்டில் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருப்பதியில் நேற்று 76,343 பேர் தரிசனம் செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறையால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையினால் குளிர்ந்த காற்று வீசுகிறது. தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி தரிசனம் செய்தனர். அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளதால் தங்கும் விடுதி கிடைக்காமல் அவதி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 76,343 பேர் தரிசனம் செய்தனர். 18,768 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.34 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
- என்.டி.ஏ. கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருகிறது.
இதற்கிடையே, ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட முடிவு செய்து 6 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூரு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக பெரும்பாலானோர் குற்றச்சாட்டு.
- அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்தியாவிலேயே போக்குவரத்து மிகுந்த நகரமாகும். இங்குள்ள சாலைகள் குண்டு குழியுமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு சரியான நேரத்தில்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
பெங்களூருவை சுற்றி ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுத்தின் தலைவர்கள் மோசமான சாலைகள் குறித்து விமர்சித்துள்ளனர். சில நிறுவனங்கள் பெங்களூருவை விட்டு வெளியேறுவதாகக் கூட தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெங்களூரு சாலை பள்ளங்கள் நிரப்பப்பட வேண்டும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு பெருநகர ஆணையத்தின் தலைமை ஆணையர் மகேஸ்வர் ராவ், கூடுதல் தலைமை செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை துஷார் கிரிநாத் ஆகியோ் உள்ள அரசு அதிகாரிகளிடம பேசியுள்ளேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து பள்ளங்களும் சரி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளேன்.
மழையால் பள்ளங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதான் பிரச்சினை. இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளது. நாங்கள் பள்ளங்களை நிரப்புவோம். பெரும்பாலான இடங்களில் ஒயிட்-டாப்லிங் பணியை மேற்கொள்வோம். இது சாலையை பள்ளமாக்குவதில் இருந்து பாதுகாக்கும்.
எம்.எல்.ஏ.-க்களுக்கு அவர்களது தொகுதி மேம்பாட்டிற்காக 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி நகர் மற்றும் கிராமப்புற எம்.எல்.ஏ.-க்களுக்கும் கொடுக்கப்படும். ஏனென்றால், நாங்கள் ஆல்-ரவுண்ட் வளர்ச்சியை விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
- 3 தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர்கள் வாபஸ்.
- பீகாரில் என்டிஏ-வை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தலில் போட்டியிடுகிறது.
அந்த கட்சியின் மூன்று வேட்பாளர்கள் திடீரென தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர கூறியதாவது:-
கடந்த சில வருடங்களாக யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பாஜக-தான் ஆட்சி அமைக்கும் என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கியுள்ளது. ஜன் சுராஜ் வெறும் வாக்கை பிரிக்கம் கட்சி, எங்களுக்கு எந்த அடையாளமும் இல்லை என்று கூறிய கட்சியின் நிலையைப் பாருங்கள். வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, தேசிய ஜனநாயகக் கூட்டணி அச்சத்தில் உள்ளது.
மக்களை பயமுறுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்தும் லாலு கட்சி கூட்டணிக்கு அவர்கள் பயப்படுவதில்லை. மக்களுக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், லாலு யாதவின் 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த முறை, மக்களுக்கு ஒரு புதிய வழி இருக்கிறது, அது ஜன் சுராஜ்.
லாலுவின் பயத்தால் மக்கள் பாஜகவிற்கும் நிதிஷ் குமாருக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாஜகவின் பயத்தால் லாலு ஜிக்கும் வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த 30 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவதற்கான வழி ஜன் சுராஜ்தான்.
தனபூர், பிரஹாம்பூர், கோபால்கஞ்ச்ஆகிய தொகுதிகளில் வலுக்கட்டாயமாக ஜன் சுராஜ் வேட்பாளர்கள் வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர். ஜன் சுராஜ் தலைவர்கள் ஓடிப்போகிறார்களா அல்லது ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறதா என்பதை பீகார் தெரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் வெளிப்படையாக மிரட்டப்படுகிறார்கள்..
எங்கள் கட்சியில் 240 வீரர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். அவர்கள் NDA-வை வேரறுக்கும் வரை ஓய மாட்டார்கள். நவம்பர் 14 (வாக்கு எண்ணிக்கை நாள்) அன்று எல்லாம் தெளிவாகிவிடும். பிரசாந்த் கிஷோரும் அவரது ஜன் சுராஜ் கூட்டாளிகளும் பயப்படப் போவதில்லை. நீங்கள் எத்தனை வேட்பாளர்களை வாங்கினாலும், அச்சுறுத்தினாலும் அல்லது கட்டுப்படுத்தினாலும் தேர்தலில் வலுவாகப் போராடும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.






