என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்"

    • லண்டனை சேர்ந்த பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.
    • லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த 34 வயது பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை.

    இந்நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண் ஒருவரின் கருப்பை, கடந்த 2023-ம் ஆண்டு இவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    கருப்பை பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே கருத்தரித்த அந்த பெண், தற்போது எவ்வித பாதிப்புமின்றி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். "இறந்த பின்பும் ஒரு பெண்ணால் இன்னொருவருக்கு தாய்மையைத் தர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என டாக்டர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் மருத்துவத் துறையில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

    • பெண்ணின் முகத்தில் 10 முதல் 12 தையல்கள் வரை போடப்பட்டுள்ளது
    • சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது

    ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஓடும் வேனில் பெண் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் திருமணமான 28 வயது பெண் வீட்டிற்கு செல்வதற்காக நின்றுள்ளார். அப்போது இரண்டு இளைஞர்கள் லிஃப்ட் கொடுப்பதாக கூறி வேனில் ஏற்றியுள்ளனர். தொடர்ந்து ஓடும் வாகனத்திலேயே இரண்டு பேரும் அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்பெண் கத்தி கூச்சலிட்டும், வேனை நிறுத்தாமல் மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

    பின்னர் அதிகாலை 3 மணியளவில், எஸ்.ஜி.எம் நகரில் உள்ள ராஜா சௌக் அருகே, ஓடும் வேனில் இருந்து அந்தப் பெண்ணை தூக்கி வீசியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது தங்கைக்கு ஃபோன் செய்து நடந்தவற்றைக் கூறியுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் 10 முதல் 12 தையல்கள் வரை போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் வாக்குமூலம் எதுவும் வாங்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

    மூன்று குழந்தைகளுக்கு தாயான இப்பெண் குடும்பத் தகராறு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமையன்று தனது தாயுடன் ஏற்ட்ட தகராறில் தோழியின் வீட்டிற்கு செல்வதாகவும், மூன்று மணிநேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துவிடுவதாகவும் தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

    ×