search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடபத்திரகாளி திருநடன உற்சவம்
    X

    திருநடன உற்சவம் நடந்தது.

    வடபத்திரகாளி திருநடன உற்சவம்

    • ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
    • வீடுகள் தோறும் குத்துவிளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    பூதலூர்:

    வடக்கு பூதலூர் கோவில்பத்து இணைப்பில் அமைந்துள்ள வடபத்திரகாளி, காமாட்சி அம்மன் கோவிலில் 5-வது ஆண்டாக வட பத்திரகாளி திருநடன உற்சவ திருவிழா நடைபெற்றது.

    விழாவினை ஒட்டி கோவிலில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமிக்கு அபிஷேக நடைபெற்றது.

    தொடர்ந்து விண்ணமங்கலம் வெண்ணாற்றில் இருந்து ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

    இரவு ஸ்ரீகாமாட்சி அம்மன் மின் அலங்கார தேரில் வீதி உலா நடைபெற்றது. வடபத்திரகாளி திரு நடன உற்சவ விழா இன்று காலை நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க வடபத்திர காளி வீடு வீடாகச் சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். வீடுகள் தோறும் குத்துவிளக்கேற்றி வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    Next Story
    ×