search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வாகன மோதி வாலிபர் பலி
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே வாகன மோதி வாலிபர் பலி

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
    • போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் ஆர். புதுப்பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரது மகன் சுரேஷ் (வயது 33 ). இவரும் ராமம்பாளையத்தைச் சேர்ந்த வீரன் என்பவரது மகன் ரமேஷ் (32). இவர்கள் இரண்டு பேரும் நேற்று இரவு பொங்கலூர் வந்துவிட்டு ராமம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பவர் ஹவுஸ் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் காயமடைந்த ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×