search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் தொழிலாளி தற்கொலை
    X

    கோப்புபடம்.

    தாராபுரத்தில் தொழிலாளி தற்கொலை

    • குடித்துவிட்டு 2-வது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
    • தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

    தாராபுரம் :

    தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது42) தொழிலாளி, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறினார். அப்போது வேலைக்கு சென்ற இடத்தில் 2-வதாக ராஜிவை திருமணம் செய்து கொண்டு மகன், மகளுடன் வசித்து வந்தார். சிவகுமார் தினசரி குடித்துவிட்டு வந்து 2-வது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று மாலையில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

    அதிர்ச்சி அடைந்த மனைவி கதவு சாவித் துவாரம் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கியுள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயங்கி இருந்தார். சிறிது நேரத்தில் சிவகுமார் இறந்துவிட்டார் இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×