search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் பின்நோக்கி நடக்கும் நபரால் வாகன ஓட்டிகள் குழப்பம்
    X

    கோப்புபடம்.

    அவினாசியில் பின்நோக்கி நடக்கும் நபரால் வாகன ஓட்டிகள் குழப்பம்

    • ஆயிரகணக்கான கார், வேன், லாரி, தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி - கோவை மெயின்ரோட்டில் தினமும் காலை முதல் ஆயிரகணக்கான கார், வேன், லாரி, தனியார் மற்றும் அரசு பஸ்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் இடைவிடாமல் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் ரோட்டில் பின்நோக்கி நடப்பதையும், ரோட்டின்மைய தடுப்பில் அமர்ந்து கொள்வதையும்பல மாதங்களாக வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர் யாராவது அவரிடம் ஏன் இப்படி பின்புறமாக நடக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களை அவர் தகாத வார்த்தையால் திட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    எனவே அவரை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×