search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுவேலம்பாளையம் மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு விழா
    X

    பட்டத்தரசியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்ற காட்சி.

    நடுவேலம்பாளையம் மாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு விழா

    • பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.
    • பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடைபெற்றது

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் , பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில்,பட்டத்தரசியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் உள்ளது. இக்கோவிலின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று காலை நடுவேலம்பாளையம் பொதுமக்கள் நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவிலில் இருந்து மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு தீர்த்த கலசங்களை கொண்டு வந்தனர்.பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மன், பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .இதில் நடுவேலம்பாளையம் ,லட்சுமிநகர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மன்,பட்டத்தரசியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழாவில் பங்கேற்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×