என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் அருகே 45 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
- தனிப்படை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- கஞ்சா இலைகள் மற்றும் விதைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள ஏராகம்பட்டி சோதனை சாவடியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் கோவர்த்த னாம்பிகை தலைமையில் தனிப்படை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ து சந்தேகப்ப டும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில, வாழப்பாடி, முத்துப்பட்டி அடுத்த சிஎஸ்ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (25) ஆந்திரா மாநிலத்தில் இருந்து தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ,மதுரை ஆகிய பகுதிகளுக்கு கஞ்சா எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து கார், 45 கிலோ கஞ்சா இலைகள் மற்றும் விதைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தமிழ்ச் செல்வனை செய்து விசா ரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் கஞ்சாவை கடத்திச் செல்ல உறுதுணையாக இருந்த தமிழ்ச்செல்வனின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினரை, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்