search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் அருகே 45 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
    X

    கைதான தமிழ்செல்வனையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளையும் படத்தில் காணலாம்.

    தாராபுரம் அருகே 45 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

    • தனிப்படை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா இலைகள் மற்றும் விதைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள ஏராகம்பட்டி சோதனை சாவடியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் கோவர்த்த னாம்பிகை தலைமையில் தனிப்படை போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போ து சந்தேகப்ப டும்படி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில, வாழப்பாடி, முத்துப்பட்டி அடுத்த சிஎஸ்ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (25) ஆந்திரா மாநிலத்தில் இருந்து தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ,மதுரை ஆகிய பகுதிகளுக்கு கஞ்சா எடுத்துச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து கார், 45 கிலோ கஞ்சா இலைகள் மற்றும் விதைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தமிழ்ச் செல்வனை செய்து விசா ரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் கஞ்சாவை கடத்திச் செல்ல உறுதுணையாக இருந்த தமிழ்ச்செல்வனின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். துரிதமாக செயல்பட்டு கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினரை, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் பாராட்டினார்.

    Next Story
    ×