search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி
    X

    ரோட்டோரமாக இறந்து கிடந்தவரை படத்தில் காணலாம்.

    வாகனம் மோதி கட்டிட தொழிலாளி பலி

    • கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரோட்டோரமாக ஒருவர் இறந்து கிடந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் பிரிவு அருகே, கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மொபட்டில் சென்ற ஒருவர் ரோட்டோரமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து யார் அவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர் .அவரது வாகனத்தில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததால் கட்டிட தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×