என் மலர்
திருச்சிராப்பள்ளி
- பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
- விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது. இவை தவிர வெளிநாட்டு சேவைகளாக பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி தினமும் காலை 6 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்படுவது வழக்கம்.
இந்த விமானம் இன்று காலை ஐதராபாத் நோக்கி புறப்படுவதற்கு தயாரானது.
இதில் 120 பயணிகள் பயணம் செய்வதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கோளாறை சரி செய்யும் பணியில் விமான பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
எனினும் அதனை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து அதில் பயணிகள் ஐதராபாத் செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மாற்று விமானம் ஆனது மதியம் 12.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 120 பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
- அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. துறையூரில் பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பி அருகில் சிங்களாந்தபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்கிறது.
பச்சமலையில் பெய்த மழையால் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டதால், திருச்சி-துறையூர் சாலைகளில் இருந்து அம்மாபட்டிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இந்த சாலையானது சிங்களாந்தபுரம் ஏரிக்கு அருகில் உள்ளது. இதனால் சிங்களாந்தபுரம் ஏரி நிரம்பியதால் அருகில் உள்ள விளைநிலங்கள் மற்றும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அப்பகுதிக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். குறுக்கு சாலையில் உள்ள தண்ணீர் அளவானது தற்போது உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அம்மாபட்டி கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழையால் 150 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், செந்துறை ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் அதிக கன மழை பெய்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தின சாமி உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
ஜெயங்கொண்டம் 205, செந்துறை 195.4, அரியலூர் 179, சுத்தமல்லி டேம் 152, குருவாடி 115, ஆண்டிமடம் 111.2, திருமனூர் 90, தா.பழூர் 39.4.
எரையூர்-166, அகரம் சீகூர் 140, லெப்பைக்குடிக்காடு 139, வேப்பந்தட்டை-127, தலுதலை-122, கிருஷ்ணாபுரம்-111, வி.களத்தூர்-95, பெரம்பலூர்-94, படுவேட்டைக்குடி 71, செட்டிகுளம் 75, பாடாலூர் 21.
ஆவுடையார்கோவில் 143, மணமேல்குடி 135, மீமிசல் 67, விராலிமலை 63, நாகுடி 66.20, கீழாநிலை 63.90, ஆயின்குடி 57.20, அறந்தாங்கி 56.40, கீரனூர் 50.40, இலுப்பூர் 48.80, ஆதன கோட்டை 48, திருமயம் 46.70, கந்தர்வகோட்டை 45.40, புதுக்கோட்டை 44.10, பெருங்களூர் 40.60, மழையூர் 40.60, உடையாளிபட்டி 39, அன்னவாசல் 35.60, ஆலங்குடி 35, குடுமியான் மலை 34.50, கரையூர் 30.80, பொன்னமராவதி 25.40, கறம்பக்குடி 27, அரிமளம் 20.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 1264.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 52.67 ஆகும்.
- இன்று காலையில் இருந்து கனமழை பெய்துவருகிறது.
- பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தும் குடை பிடித்தும் சென்றனர்.
திருச்சி:
வட கிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
தற்போது இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன் படி நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பல இடங்களில் மழை கொட்டியது.
இன்று காலையில் இருந்தும் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இரவு நேரத்தில் பிடித்த மழையானது விடாமல் கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலைகள் பாதிக்கப்பட்டது.
திருச்சியில் நேற்று இரவு 11 மணி முதல் விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. திருச்சி மாநகரில் இடைவிடாத மிதமான மழை பெய்து வருகிறது.
இரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் நீடித்தது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தும் குடை பிடித்தும் சென்றனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளக்குடியில் 45.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மாவட்டத்தின் இதர பகுதிகளான லால்குடி 8, நந்தியாறு அணைக்கட்டு 37.4, புள்ளம்பாடி 42 ,தேவி மங்கலம் 19.8, சமயபுரம் 22.4, சிறுகுடி 20.2, வாத்தலை அணைக்கட்டு 18, மணப்பாறை 13.4 , பொன்னணி ஆறு அணை 13, கோவில்பட்டி 17.2 , மருங்காபுரி 4.2, முசிறி 2, புலிவலம் 5, தாப்பேட்டை 5, நவலூர் கொட்டப்பட்டு 16, துவாக்குடி 24, கொப்பம்பட்டி 3, தென்பர நாடு 10, துறையூர் 10, பொன்மலை 15, திருச்சி ஏர்போர்ட் 24.4, திருச்சி ஜங்ஷன் 26.6, திருச்சி டவுன் 18 என மழை அளவு பதிவானது.
மாவட்டம் முழுவதும் 419. 8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி மழை அளவு 17.49 ஆகும்.
கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெங்கமேடு, சர்ச் கார்னர், தாந்தோணி மலை, காந்தி கிராமம், மாயனூர், தோகைமலை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கன காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு, கரூர் 4, அரவக்குறிச்சி 1.20, அணைப்பாளையம் 2, குளித்தலை 9.60, தோகைமலை 23.20, கிருஷ்ணராயபுரம் 8.40, மாயனூர் 7, பஞ்சப்பட்டி 10.40, கடவூர் 4, பாலவிடுதி 6, மைலம்பட்டி 8 மி.மீ மழையும், மாவட்டம் முழுவதும் 83.80 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஆவுடையார் கோவில் 74.80, மணமேல்குடி 44.40, மீமிசல் 40.60, கீரனூர் 35.40, பெருங்களூர் 34, விராலிமலை 34, நாகுடி 33.60, அன்னவாசல் 33.20, அறந்தாங்கி 33.20, கந்தர்வகோட்டை 32.60, ஆலங்குடி 27.20, ஆதனகோட்டை 27, ஆயின்குடி 26.20, புதுக்கோட்டை 24.60, கறம்பக்குடி 21.50, இலுப்பூர் 20, திருமயம் 18.50, உடையாளிபட்டி 15.20, அரிமளம் 15, மழையூர் 14, பொன்னமராவதி 14, கரையூர் 12.60, குடுமியான் மலை 12.40, கீழாநிலை 8.30.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 652.30 மில்லி மீட்டர் மழை பத்வாகி உள்ளது. இதன் சராசரி 27.18 ஆகும்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜெயங்கொண்டத்தில் 54.8 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் குருவாடி 41, திருமானூர் 37.2, செந்துறை 36.6, சித்தமலை டேம் 34, அரியலூர் 25, தா.பழூர் 13.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 266.4 மி.மீ.மழை பெய்துள்ளது. இதன் சராசரி 33.30 ஆகும்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
- டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மக்கள் போராடியதற்கு பின்பு எதிர்ப்பதை போல் தமிழ்நாடு அரசு நாடகமாடுகிறது.
சுரங்கம் குறித்து தமிழக பாஜக கடிதம் எழுதியதும் சட்டமன்றத்தில் பெரிய நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். டங்ஸ்டன் விவகாரத்தில் ராஜினாமா செய்வேன் எனக்கூறும் முதலமைச்சர், டாஸ்மாக் விவகாரத்தில் ராஜினாமா செய்யலாம்.
நானும், எல். முருகனும் 12-ந்தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் விவசாயிகள் நலனை மத்திய அரசு காக்கும் என்பது உறுதி என்றார்.
- ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை அமைச்சர் KN நேரு துவக்கி வைத்தார்.
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN நேரு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன.

அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் KN நேரு அவர்கள் வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான KPY பாலா, வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கிராமத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் துவங்கி வைத்தார். இதில் பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல் கோவையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் பங்கேற்றார்.
வேலூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மதுரையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உதவி ஆணையர் திரு. ராஜேஷ்வரன் பரிசுகள் வழங்கினார். அதோடு சேலத்தில் நடைபெற்ற போட்டிகளில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் சிலம்பம், வள்ளி கும்மி, படுகர் நடனம், மயிலாட்டம், மாடு ஆட்டம், அறுவடை ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும், பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.
- இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது.
- தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம்.
திருச்சி:
துணை முதலமைச்சர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர தி.மு.க. இளைஞர் அணியின் சார்பாக கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொற்கிழி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது பி.டி. அசிஸ்டன்ட் 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் உள்ளது. ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம்.
தி.மு.க.வை பொறுத்தவரை மக்களுக்கு உண்மையாக உழைக்ககூடியவர்களாக இருக்கிறோம். மக்களுக்கு பயன்படும் வகையில் நல்ல ஆட்சியை தி.மு.க. தந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தை துணை பொதுச்செயலாளர் கூறிய கருத்துக்கள் குறித்து அவர்கள் இயக்கத்துக்குள் பேசி முடிவு செய்து கொள்வார்கள். தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அண்ணன், தம்பி உறவோடுதான் உள்ளது. இது கொள்கைக்கான கூட்டணி.
அதனால்தான் இந்த கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணியில் பிளவு ஏற்படாதா என்று நிறைய பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதெற்கெல்லாம் நாங்கள் இடம் தரமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அம்பேத்கர் புத்தக விழாவில், திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு தி.மு.க. கூட்டணியின் அழுத்தம் தான் காரணம் என்று விஜய் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேட்ட போது, திருமாவளவன் ஒரு சுயமரியாதைக்காரர். அவ்வளவு எளிதாக யாரும் அவருக்கு அழுத்தம் கொடுத்துவிட முடியாது. அவர் மிகப்பெரிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம் என்றார்.
- ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தனர்.
- ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபஸ்டின், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் குழுவினர் 6-வது நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் கவுராவில் இருந்து சென்னை வழியாக வந்த கவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் கருப்பு பையுடன் சுரங்கப்பாதை வழியாக வேக வேகமாக நடந்து சென்றார்.
அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மடக்கி உடைமைகளை சோதனை செய்தனர். இதில் அவரது பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டுக்கட்டாக ரூ. 500 மற்றும் ரூ. 200 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.75 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணையில் அது ஹவாலா பணம் என தெரியவந்தது. மேலும் பணத்தை கொண்டு வந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் (வயது 49 ) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ. 75 லட்சத்தையும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.
- திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கூட்டணி அழுத்தம் காரணமாக அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனால் கலந்துகொள்ள முடியவில்லை என த.வெ.க. தலைவர் விஜய் பேசியதற்கு மறுப்பு தெரிவித்தார்.
எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.
அழுத்தம் கொடுத்தால் இணங்கக்கூடிய அளவுக்கு நானோ, விசிகவோ பலவீனமாக இல்லை.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல.
திமுகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரிடம் விளக்கம் கேட்கப்படும்.
அவரது விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
- வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன.
- வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள வாத்தலை கிராமத்தில் அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவேரி ஆற்றில் இருந்து காவேரி, கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்காக புள்ளம்பாடி, அய்யன் என 2 பாசன வாய்க்காலாக பிரிகிறது.
வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக அய்யன் வாய்க்கால் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் தற்போது சில நாட்களாகவே பெய்ந்து வரும் மழையால் தரைபாலத்தில் சிறிது மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை அய்யன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.
- கூடுதல் விமான சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தற்போது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகிறது. பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ரன்வே இல்லாத போதும், அதிக விமான சேவைகளை அளித்து, பயணிகள் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த 2023-24 நிதியாண்டில், சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் 5.5 லட்சம் பயணிகள் கையாண்டு 4-வது இடமும், கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய 5 மெட்ரோ விமான நிலையங்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான பயணிகள் போக்குவரத்தில் திருச்சியை விட அதிக அளவில் பயணிகள் போக்குவரத்தை கையாண்டுள்ளன.
இந்த நிலையில், திருச்சி-மலேசியா சேவையில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏர் ஏசியா, மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் சேவை அளிக்க முன்வந்துள்ளன.
அதன்படி, நாளை (5ம் தேதி) முதல் வாரத்துக்கு கூடுதலாக ஏர் ஏசியா 3 சேவை, மலிண்டோ 7 சேவை என மலேசியாவுக்கு 10 சேவைகளை இயக்க உள்ளன. இதன் மூலம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் திருச்சி முதலிடம் என்கிற (72 சேவைகள்) பெருமையை பெற்றுள்ளது.
கூடுதல் விமான சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருச்சி-மஸ்கட் இடையே வாரந்தோறும் புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை அளித்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் கூடுதலாக திங்கள் கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது. இதேபோல தம்மாம் இடையே ஜன 2-ம் தேதி முதல் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரம் 2 சேவை அளிக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பக்ரைன், ரியாத், ஜித்தா ஆகிய வளைகுடா நகரங்களுக்கு விமான சேவை அளிக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
- பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்டநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை சோதனை செய்தபோது அவரது கைப்பையில் கம்பி வடிவில் மறைத்து எடுத்து வந்த அரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் வந்த பயணி ஒருவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது, அவர் தனது உடமையில் மறைத்து எடுத்து வந்த குடிநீர் குழாயில் ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான 180 கிராம் தங்கத்தை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
- ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் குப்பன் வலசை பகுதியை சேர்ந்த பாலு (வயது 58) என்பவர் போலியான பாஸ்போர்ட் வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிக்ரியேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் குத்புதீன் (49) என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் இருவரையும் இம்மிகிரியேஷன் பிரிவு அதிகாரிகள் ஏர்போர்ட் போலீசார் வசம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






