என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா?
    • இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர் சந்திப்பு' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு கொட்டப்பட்டது தொடர்பாக மாநில அரசிடம் பல முறை கூறியுள்ளேன். சோதனைச்சாவடி தாண்டி எப்படி இங்கு வந்தது. தம்ழகத்தில் மருத்துவ கழிவு கொட்டப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் பல இடங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    வெளியே செல்ல வேண்டும் என்றால் அச்சமாக உள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. செவிலியர்களின் கோரிக்கை ஏற்கவில்லை. விவசாயிகள், மருத்துவர்கள் பல போராட்டம் நடத்துகிறார்கள்.

    மாணவர்கள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தி.மு.க. நல்லாட்சி கொடுக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். வெள்ள பாதிப்பு குறித்து இதுவரை தெளிவான பதில் இல்லை.

    தமிழ்நாடு என்ற பெயரை மாற்றிவிட்டு கருணாநிதி நாடு என்று பெயர் வையுங்கள்.

    ஜல்லிகட்டு போட்டிக்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம். எதற்கு அவர் பெயர் வைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் எந்த நச்சு திட்டமாக இருந்தாலும் அதில் கருணாநிதி கையெழுத்து போட்டு இருப்பார்.

    பெருமைமிகு அடையாளங்களை மூடி விட்டு, அனைத்திற்கும் கலைஞர் பெயரை சூட்ட தி.மு.க. அரசு நினைக்கிறது. தி.மு.க. சாதனைகளை போர் பரணி பாட வேண்டும். சட்டம், ஒழுங்கி பிரச்சனை உள்ள நிலையில் தி.மு.க.வின் போர் பரணியை கேட்க நான் தயாராக இருக்கிறேன்.

    வேல்முருகருடன் இணைந்து பணியாற்ற அழைத்தேன். அப்போது தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று என்னை அழைத்தார். ஏனெனில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவருக்கு பாதுகாப்பு இருக்காது. கட்சியை வளர்க்க முடியாது என்று கூறினார்.

    அதனால் தினகரனுடன் கூட்டணிக்கு போகலாம் என்று அழைத்தார். நீங்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் தினகரனுடன் கூட்டணி எதற்கு? தி.மு.க.வுடனே கூட்டணி அமைக்கலாமே என்று நான்தான் கூறினேன்.

    நான் இஸ்லாமியரின் ஓட்டை பொறுக்க நடந்து கொள்கிறேன் என்கிறார். என் தலைவன் மீது ஆணையாக சொல்கிறேன். இதுவரை இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போட்டது இல்லை. இனிமேலும் போடுவார்களா என்று தெரியாது. இஸ்லாமியர்களை பொறுத்தவரை நாங்கள் பா.ஜ.க.வின் பி டீம். நான் ஏன் பி டீம் ஆனேன். ஏ டீமாக தி.மு.க. இருப்பதால் நான் பி டீம் ஆகி விட்டேன்.

    இந்த நாட்டில் தீர்ப்புகள்தான் சொல்லப்படுகிறது. நீதி வழங்கப்படுவதில்லை. இந்த நாட்டில் தீர்ப்பு மன்றங்கள் தான் உள்ளது. நீதிமன்றங்கள் கிடையாது. வர்கீஸ் பானு வழக்கில் கூட அனைத்து குற்றவாளிகளும் விடுதலை ஆகி விட்டனர்.

    இடஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும். பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? பா.ஜ.க.விற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது.

    சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. நடத்துமா? சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம். இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனர்.

    திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை? முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை? உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா? உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
    • இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இஸ்லாமியர்களை எதிர்ப்பதை தவிர பா.ஜ.க.விற்கு வேறு கொள்கை இருக்கிறதா?

    * இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    * இடஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும்.

    * பாஜகவிற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

    * பாஜகவிற்கு சமூக நீதி மட்டுமல்ல ஜமுக்காள நீதி கூட கிடையாது.

    * சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக நடத்துமா?

    * சமூகநீதி பேசுபவர்கள் பொருளாதார அடிப்படையில் எப்படி இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள்.

    * இன்றைக்கு ஏழையாக இருக்கிற சீமான் நாளை அதானி, அம்பானி ஆகலாம்.

    * இவ்வளவு உயரம் தொட்ட இளையராஜா மீதே சாதி சேற்று பூசுகின்றனனர்.

    * குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்தது யார்?

    * உண்டியலில் குண்டு விழுந்தால் அது கோவிலுக்கு சொந்தம் என்று கூறுவீர்களா?

    * உண்டியலில் விழுந்த செல்போனை அவருக்கு திருப்பி அளித்திருக்க வேண்டும்.

    * திருப்போரூர் கோவிலுக்கு என்று தனிச்சட்டம் உள்ளதா என தெரியவில்லை?

    * முருகன் யாரிடமாவது ஐபோனில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டாரா என தெரியவில்லை? என்றார். 

    • இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற மூர்த்தி திடீரென்று வாகனத்தை வேறு திசையில் திருப்பினார்.
    • புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள 20 வயது இளம்பெண் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் துறையூர் தேவாங்கர் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் தனது அண்ணன் திருமணம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த இளம்பெண் சொந்த ஊருக்கு வந்தார். அப்பொழுது அந்த இளம்பெண்ணுக்கு, காதலன் செண்ட்பாட்டில் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் அதிருப்தி அடைந்த இளம்பெண் தனது காதலனின் நண்பனான குப்பன் மகன் மூர்த்தி (வயது 27) என்பவரின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று, தன்னை தனது காதலனின் வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற மூர்த்தி திடீரென்று வாகனத்தை வேறு திசையில் திருப்பினார்.

    இளம்பெண்ணை துறையூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று , பலவந்தமாக கற்பழித்ததாக தெரிகிறது. பின்னர் இந்த சம்பவத்தை பற்றி வெளியில் கூறினால், இளம்பெண்ணின் குடும்பத்தினரை காலி செய்து விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் பயந்து போன இளம்பெண் நடந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் தெரிவிக்காமல், மீண்டும் செங்கல்பட்டு சென்று பணியில் சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்த மூர்த்தி இளம்பெண்ணின் காதலனுக்கு போன் செய்து கற்பழிப்பு சம்பவத்தை பற்றி போதையில் உளறியுள்ளார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காதலன், இதைப் பற்றி இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து பாதிப்படைந்த இளம்பெண், பெற்றோரின் துணையுடன் நேற்று துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மூர்த்தியை துறையூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். துறையூர் அருகே இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் பிரச்சனையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.

    அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள் ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். தமிழகத்திற்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணம் கேட்டால் அது குறித்து மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

    இஸ்லாமியர்களை எதிர்த்து பேசுவதை தவிர ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு வேறு கொள்கை இல்லை. மக்களுக்கான திட்டங்களை பா.ஜ.க அரசு எதுவும் செய்வதில்லை. அவர்கள் கோவிலை விட்டு வெளியே வந்து குடிசைகளை பார்ப்பதில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.நடிகர் விஜய் மிகப்பெரிய திரைப்பட கதாநாயகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் கூடுவார்கள். அதனால் போக்குவரத்தை சரி செய்வதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்படும். எனவே வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளார்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை.

    மக்களை நேரில் சென்று சந்திப்பதை சடங்கு என கூறும் நடிகர் விஜய், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் அழைத்து சந்திக்காதது ஏன்?

    பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். தமிழ்நாடு அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என கவர்னர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை கவர்னர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

    இது மக்களாட்சி. 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என கவர்னர் கூறக்கூடாது. ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது.

    மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவோம் என இலங்கை அதிபர் கூறுகிறார். கச்சத்தீவு என்பது தமிழர்களின் உரிமை. தமிழக மீனவர்களாக இருந்தால்தான் இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது.

    கேரள மீனவர்களையோ குஜராத் மீனவர்களையோ கைது செய்வதில்லை. அப்படி கைது செய்யப்பட்டாலும் உடனடி நடவடிக்கைகளில் அரசு அவர்களை மீட்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு கண்டு கொள்வதில்லை.

    இளையராஜா நகையும் சதையும் உள்ள மனிதன் அல்ல அவர் இசை தெய்வம். அவர் கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. மாபெரும் கலைஞன் தாழ்த்தப்பட்டவராகவே பார்க்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?
    • மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு.

    திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷாவுக்கு இறுதி ஊர்வலம் நடந்தது தொடர்பாக சீமான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

    * சிறையில் 50 நாட்கள் பாஷாவுடன் இருந்த காலத்தில் இருந்து அவரை அப்பா என்று தான் கூப்பிடுவேன்.

    * இறந்தவர் உடலை அடக்கம் செய்யும் இடத்திற்கு எப்படி எடுத்து செல்வது?

    * ஆர்.எஸ்.எஸ். பேரணியின் போது இஸ்லாமிய அமைப்பினர் யாராவது போராடினார்களா?

    * விநாயகர் ஊர்வலத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்கிறது.

    * பாஷா குற்றவழக்கில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை யாரும் மறுக்கவில்லை.

    * குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றது மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தெரியாதா?

    * பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றவர்கள் உயரிய பதவியில் அமரலாமா?

    * 2 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பி 26 ஆயிரம் மக்களை கொன்றுகுவித்த ஒரு நாட்டின் தலைவரை பற்றி பேசமாட்டீர்கள். அந்த செயலையும் பேசுங்க.

    * ஒரு தரப்பில் மட்டும் பேசிக்கொண்டு இருப்பது எப்படி?

    * மரியாதை நிமித்தமாக சவ ஊர்வலத்தில் சென்று உடல் அடக்கத்தில் பங்கேற்பது மனித மாண்பு. அது குறிப்பாக தமிழ் பேரினத்தின் மாண்பு.

    * மக்களோடு மக்களாக நிற்பவர்களை அப்படி பேசுவதை ஏற்க கூடாது.

    * பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்வதை சடங்கு என்பது தவறான வார்த்தை. அப்படி சொல்லக்கூடாது. விஜய் ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை என்றார். 

    • திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.
    • சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    திருச்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், சிறுபான்மைச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்களைப் பார்த்துப் பார்த்து பாசத்தோடு செய்வோம். அதனால்தான், வரலாற்றுப் பக்கங்களில் திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாவலனாக போற்றப்படுகிறது.

    சிறுபான்மையின சகோதர, சகோதரிகளின் அரணாக திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்களின் உரிமை, வாழ்வாதாரத்தை காப்பதில், தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது. மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து பாதுகாப்போம்.

    பெரும்பான்மையை பார்த்து பயப்பட தேவையில்லாத சூழலில் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவது தான் மதச்சார்பின்மை கொள்கையின் மகத்துவம். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு தான். இருந்தாலும் இந்திய அளவில் தற்போது நிலவக்கூடிய சூழல் நம்மை கவலைப்பட வைப்பதாக உள்ளது. அத்தகைய சூழலை எதிர்கொள்ள சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    இந்திய அரசியலமைப்பு சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மை கொள்கையை திராவிடல் மாடல் அரசு எந்நாளும், எந்த நிலையிலும் பாதுகாக்கும். சிறுபான்மையினருக்கு திமுக என்றென்றும் அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
    • மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    கே.கே.நகர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலாமணி(வயது 45). அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(32). இவர்கள் இருவரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    திருச்சி ஓலையூர் ரிங் ரோடு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. இதில் கலாமணி, மாணிக்கம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.

    அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

    மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் திரண்டு மாணிக்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்திலேயே பலியான மாணிக்கம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.
    • சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் வடபாதியில் அமைந்து ஸ்ரீமகா முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று வந்தது.

    பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக அப்பகுதியை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்தனர். அவர்களுக்கு விழா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    • இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் புகார்.
    • சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

    திருச்சியில், டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    உரிய அனுமதியின்றி வாடிக்கையாளர்களுக்கு நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிடும் (Tongue Splitting) செயலை டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் செய்து வந்தார்.

    இளைஞர்கள், மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

    இந்நிலையில், டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன், அவரது கடையில் பணியாற்றிவந்த ஜெயராமன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.
    • எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை.

    எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது நான் அதை சுதந்திரமாக எடுத்த முடிவுதான். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தான்.

    ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க. அரசு கொண்டுவர பார்க்கிறார்கள்

    இவ்வாறு தொல் திருமாவளவன் கூறினார்.

    • ஆதவ் அர்ஜூன் தற்காலிக நீக்கத்திற்கு பிறகாவது பொது இடங்களில் கருத்துக்கள் கூறாமல் இருக்க வேண்டும்.
    • கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறார்கள். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய உறுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தார்கள் . அதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல் சமூக நீதிப் கோட்பாட்டுக்கு எதிரான தாக்குதல் அதேபோல வழிபாட்டு தளங்களுக்கான சட்டம் 1948 இல் வந்தது.

    அந்த சட்டத்தை பொருட்படுத்தாமல் அதனை அவமதிக்கிறார்கள் ராமர் கோவில் கட்டியது இதற்கு ஒரு முன்னுதாரணம். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருக்கிற சோசியலிசம் செக்யூலரிசம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்தார்.

    இப்போது அதே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1948 நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள் பாஜக கட்சியை சார்ந்தவர்கள். அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்.இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இதுவும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

    ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கரையும், அரசமைப்பு சட்டத்தையும் புகழ்ந்து கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதலை பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது . தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தை தடுக்க வேண்டும்.

    அரசமைப்பு சட்டம் குறித்த விவாதத்தில் இது குறித்த கருத்துக்களை பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் அனுமதிக்கவில்லை . ஆதவ் அர்ஜூன்

    நீக்கம் குறித்து யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. முதலமைச்சரை அடிக்கடி நேரில் சந்திக்க முடியாது என்ற காரணத்தினால் தான் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பேசினேன்.

    ஆதவ் அர்ஜூன் தற்காலிக நீக்கத்திற்கு பிறகாவது பொது இடங்களில் கருத்துக்கள் கூறாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து பேசி வருவது தவறு.

    தமிழகத்தில் மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். முதல்வரை சந்தித்தபோதும் இதனை வலியுறுத்தினோம்.

    கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு சட்ட வழிகாட்டுதல் இருக்கிறது அதற்கான அரசாணை இருக்கிறது அதை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
    • திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது.

    சென்னை முதல் நெல்லை வரை அனேக மாவட்டங்களில் மழை பெய்தது. நேற்று தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல் திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது.

    திருச்சியில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று மழை தொடர்வதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழைக்காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் விழுப்புரம், தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ×