என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர்.
    • எங்களுக்கான கூட்டணியை சிதைக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.

    கே.கே.நகர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பஞ்சமி நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து முன்பு கருணாநிதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு மீண்டும் இயங்க வேண்டும் என்பது தெரிவித்துள்ளோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர் நியமிக்க முடிவு எடுத்துள்ளோம்.

    ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓராண்டு கடந்திருக்கிறது. கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நுண்ணிய அளவில் வரைமுறை செய்து ஏராளமான பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.

    இப்போது கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் 7 ஆண்டுகளாக தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளோம். 2 கூட்டணிகளை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு பங்கு உண்டு.

    நாங்கள் உருவாக்கிய கூட்டணிகளை மேலும் பலப்படுத்த வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய கவனம் இருக்கிறது. இந்த கூட்டணிகளை விட்டுவிட்டு இன்னொரு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவையில்லை.

    ஏற்கனவே பலமுறை நான் சுட்டிக்காட்டி உள்ளேன். திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் சில ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மதசார்பற்ற கூட்டணி உருவாக்கியதில் எங்களுக்கு பங்கு உண்டு. அது எங்கள் கூட்டணி.

    எங்களுக்கான கூட்டணியை சிதைக்க வேண்டிய தேவை விடுதலை சிறுத்தைகளுக்கு இல்லை.

    2026-ம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.

    புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து ஓராண்டு ஆகிறது. இதில் பங்கேற்க ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டு இருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்தையும் அழைக்கலாம் என தகவல் சொன்னார்கள்.

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு முன்பாக விஜய்யை அழைக்கலாம் என தெரிவித்திருந்தனர். அதற்கும் நான் இசைவு தெரிவித்திருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    திராவிடத்தைப் பற்றி ஏற்கனவே கருத்து சொல்லி உள்ளேன். பெரியாருக்கு முன்னதாகவே இந்த தமிழ் மண்ணில் திராவிடம் குறித்து பேசப்பட்டுள்ளது. சைவ எழுச்சி எழுந்த போது ஆரிய எதிர்ப்பு உண்டானது. அப்போது திராவிடர் என்று சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    திராவிடம் கருத்தியல் இல்லை என்றால் சனாதன நம்மை விழுங்கி இருக்கும். இந்தி தமிழை விழுங்கி இருக்கும்.

    திராவிட கருத்தியல் இல்லாமல் இருந்தால் சமஸ்கிருதம் தமிழை விழுங்கி இருக்கும். தமிழர் இனம் இருக்கிறோம் என்றால் பாதுகாப்பு காரணம் திராவிட கருத்தியல் தான். ஆனால் திராவிட எதிர்ப்பை திராவிட அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    நாடு முழுவதும் விமானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையிடும் போது அது புரளி என தெரியவருகிறது.

    இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 

    • சந்தேகத்திற்கு இடமாக திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • வாலிபரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் தசரதன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் லால்குடி அருகே தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முருகானந்தம் (வயது 24) என்பதும் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே மேலரசூர் கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி மகன் ரிச்சர்ட் (வயது 20). அதே ஊரை சேர்ந்த ஜெஸ்வின்குமார் (10). மேலரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் இருவரும் குமுளூரில் பட்டாசு வாங்குவதற்காக புள்ளம்பாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். ரிச்சர்ட் வாகனத்தை ஓட்டி சென்றார். பின்னார் ஜெஸ்வின்குமார் அமர்ந்திருந்தார்.

    கல்லக்குடி வழியாக சென்றபோது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜா தியேட்டர் அருகே சென்ற போது, ராஜா தியேட்டர் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் கோபிநாத் (37) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் பின்புறம் உட்கார்ந்து வந்த ஜெஸ்வின்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு முதலுதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மருத்துவர் ஆலோசனைப்படி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வின்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இறந்த ஜெஸ்வின்குமார் 10 வயது என்பதால் மேலரசூர் கிராமமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    • போலீசார் 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய ராகுல் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    தீபாவளி பண்டிகையையொட்டி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் குரும்பூர் மேடு அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

    அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் 150 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து 150 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்திருப்பதும்,அதனை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றிருப்பதும் தெரிய வந்தது.

    இதற்கிடையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரில் ஒருவர் தப்பியோடி விட்டார். காரிலிருந்த நாகராஜ் (வயது 20), தவமுருகன் (வயது 26), ஸ்டாலின் (வயது 36) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தப்பியோடிய ராகுல் என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பண்டிகை நேரத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு.
    • ராக்கெட் லாஞ்சர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ராக்கெட் லாஞ்சரை அங்கிருந்து பாதுகாப்பாக ஜீயபுரம் போலீசார் கொண்டு சென்றனர்.

    மேலும், இந்த ராக்கெட் லாஞ்சர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1488 கிராம் ஆகும்.
    • தங்கத்தை கடத்தி வந்த 4 பயணிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு அதிக அளவில் இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை பறிமுதல் செய்யும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது அறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்று சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணம் செய்த 4 பயணிகளின் நடவடிக்கைகளில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் டிக்கெட் பாக்கெட் மற்றும் கைப்பையில் 8 செயின் வடிவிலான தங்கத்தையும், 2 வளையல் வடிவிலான தங்கத்தையும் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மொத்தம் 1488 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.1.16 கோடி ஆகும். தங்கத்தை கடத்தி வந்த 4 பயணிகளையும் அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர். இதனால் சமயபுரம் கோவில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    இந்த கோவிலுக்கு உரிய தெப்பக்குளம், கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்த தெப்ப குளத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்தி, பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று அம்மனை தரிசிப்பார்கள்.

    இந்த தெப்ப குளத்தில்தான் தெப்ப உற்சவம் நடைபெறும். கோவிலில இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தெப்பகுளம் ஆழம் அதிகம் என்பதால் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

    பக்தர்கள் குளத்தில் இறங்கி குளிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு எச்சரிக்கை பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த தெப்பக்குளத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக சமயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது அங்கு சென்ற போலீசார் காக்கி சட்டை, பனியன் அணிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டனர்.


    இதனை தொடர்ந்து அங்கு விசாரணையை தொடங்கிய போலீசார், தெப்பகுளத்தை சுற்றி சோதனை மே ற்கொண்டனர். அப்போது அங்கு உள்ளாடை மட்டுமே அணிந்த நிலையில் மேலும் ஒரு ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த சடலத்தையும் மீட்டனர். இரண்டு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர்கள் யார்? இது விபத்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து சமயபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • துறையூரில் ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    துறையூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் இருந்து காரில் குட்கா கடத்தி வருவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து துறையூர் போலீசார் கோவிந்தாபுரம் பிரிவு சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் காரில் இருந்த மர்மநபர்கள் காரினை நிறுத்தாமல், வேகமாக துறையூர் நோக்கி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காரினை துரத்திச் சென்ற துறையூர் போலீசார் பாலக்கரை பகுதியில் காரினை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் காரில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமாராம் தேவவாசி (வயது 38), மனோகர் சேசன் (29) என்பதும், அவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை திருச்சிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதனை அடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் காரினுள் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 575 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். துறையூரில் ஒரே நாளில் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜய் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
    • மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன

    திருச்சி:

    விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி வி. சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு உள்ளது.

    மாநாட்டிற்கு தமிழகம் மற்றும் கர்நாடக, கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தென்மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வாகனங்களில் செல்வோர் திருச்சி புறநகர் பகுதியில் ஓய்வெடுத்து செல்லவும், அவர்களுக்கு காலை உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் அவர்களூக்கு மதிய உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன.

    இதற்காக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.எல்.சீனிவாசன் தலைமையில் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இணைந்து 6 ஆயிரம் உணவு பொட்டலங்களை தயார் செய்தனர். புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. பின்பு அவை பொட்டலங்களாக கட்டப்பட்டு மாநாட்டுக்கு சென்ற தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது.

    த.வெ.க. தொண்டர்கள் இணைந்து நடிகர் விஜய்க்காக தங்களது சொந்த பணத்தில் இந்த உணவை தாயார் செய்ததாக தெரிவித்தனர். இரவு முழுவதும் கண்விழித்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக வி.எல்.சீனிவாசன் தெரிவித்தார்.

    • ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
    • தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமாக பேசி இருக்கிறார்.

    திருச்சி:

    தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீல் முரளி கிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

    எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள 2 வரிகளை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று மிகவும் கண்ணியக் குறைவாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.

    இது சமூக வலைதளத்தில் பரவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்து, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

    தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீது உள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆகவே சீமான் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    • திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.
    • பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அன்றாடம் சுமார் 400 டன் குப்பைகளை சேகரித்து, அகற்றும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    இதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு முழுவதும், விடிய விடிய போராட்டம் நீடித்தது.

    இதன் காரணமாக திருச்சி மாநகராட்சி வளாகத்திற்கு வெளியே துப்புரவு பணியாளர்கள் தரையில் படுத்து தூங்கினர்.

    இந்நிலையில் இன்று காலை தொடர்ந்து போராட்டம் 2-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகிகள் சென்றபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களிடம் பேச ஆரம்பித்தனர். இதை அறிந்த பேச்சுவார்த்தைக்குச் சென்ற நிர்வாகிகள் உடனடியாக மீண்டும் திரும்பி வந்தபோது தனியார் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ×