search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் தலசீமியா தொடர் சிகிச்சை முகாம்
    X

    தலசீமியா தொடர் சிகிச்சை முகாம் நடந்தது.

    அரசு ஆஸ்பத்திரியில் தலசீமியா தொடர் சிகிச்சை முகாம்

    • 4 குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று உயர் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜிநாதன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட தொடக்க நிலை இடையிட்டு சேவைகள் மையம், சென்னை குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் தலசீமியா தொடர் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தலைமை வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த முகாமில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று உயர் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் சென்னை குளோபல் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பொன்னி சிவப்பிரகாசம், ஹரிஷ்குமார் மற்றும் குழந்தைகள் நலத்துறை தலைவர் செல்வ குமார், நிலைய மருத்துவ அலுவலர் சுப்புராமன், மருத்துவ கல்லூரி மருத்து வமனை நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×