search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    தென்காசி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    • ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார்.
    • விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பொருளாளர் ராமர், செயற்குழு உறுப்பினர்கள் அயூப் கான், குருவையா ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், சங்கர் அய்யா, துணைச்செயலாளர்கள் மங்கல செல்வி, தங்கமாரி, ஒன்றிய செயலாளர்கள் கடையநல்லூர் லிங்குசாமி, சங்கரன்கோவில் வடக்கு மாரியப்பன், தெற்கு மாரிமுத்து, வடக்கு ராதாகிருஷ்ணன், தெற்கு பாலமுருகன், வீமன், செங்கோட்டை குமார், வாசுதேவநல்லூர் சுப்புராஜ், நகர செயலாளர் கடையநல்லூர் முகமது ரபிக், மாவட்ட தொண்டரணி செயலாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடுவது, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பேனா, பென்சில் மற்றும் நோட் புத்தகங்கள் வழங்குதல், கட்சியின் தொடக்க நாளான வருகிற செப்டம்பர் 14-ந் தேதி கிளை கழகம் தோறும் கொடி ஏற்றுதல், பொருளாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகையை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×