search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்ட புத்தக படைப்பாளர்களுக்கு தனியாக ஒரு அரங்கம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    தஞ்சை மாவட்ட புத்தக படைப்பாளர்களுக்கு தனியாக ஒரு அரங்கம்

    • 6-ம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.
    • படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 6ஆம் ஆண்டு தஞ்சாவூர் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) அரண்மனை வளாகத்தில் தொடங்குகிறது.

    வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

    காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் புத்தக திருவிழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புத்தக படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தனியாக ஒரு அரங்கம் ஏற்படுத்த கலெக்டர் தீபக்ஜேக்கப் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த படைப்பாளர்கள் மட்டும் இந்த அரங்கில் தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம்.

    இந்த அரங்கம் தஞ்சை மாநகராட்சி சார்பில் நிர்வகிக்கப்படும்.

    இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

    Next Story
    ×