search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கி வெந்நீரை ஊற்றிய ஆசிரியை-கணவர் கைது
    X

    வாலிபரை தாக்கி வெந்நீரை ஊற்றிய ஆசிரியை-கணவர் கைது

    • மணிகண்டனின் வீட்டு முன்பு மதுபாட்டில் கிடந்தது.
    • அர்ஜுன் போட்டதாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ராஜி ஆகியோர் சந்தேகம் அடைந்தனர்.

    குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன் (28). பெயிண்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மணிகண்டன். இந்த நிலையில் மணிகண்டனின் வீட்டு முன்பு மதுபாட்டில் கிடந்தது. இதனை அர்ஜுன் போட்டதாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவியான ஆசிரியை ராஜி ஆகியோர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அர்ஜுனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.

    மேலும் அவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினர். இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜுன் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் அவரது மனைவி ராஜி ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×