என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கட்சியினர் வராததால் வெறிச்சோடி கிடக்கும் வீடு- கதவை திறந்து வைத்து காத்திருக்கும் ஓ.பி.எஸ்.
- வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது வீடுகளிலும் தினமும் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் திரளுவார்கள். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் மட்டும் கூட்டம் திரளுகிறது.
- ஓ.பன்னீர்செல்வம் வீடு கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமைதான் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிடிவாதம் காட்டியது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே ஆதரவு பெருகியது. மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,400-க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள்.
அதே போல் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தலைமை கழக நிர்வாகிகள் 74 பேரில் 65 பேர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள்.
எனவே வருகிற 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
வழக்கமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரது வீடுகளிலும் தினமும் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏராளமானவர்கள் திரளுவார்கள். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வீட்டில் மட்டும் கூட்டம் திரளுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் வீடு கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் உள்ளது.
வழக்கமாக தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டு நிற்கும். ஆனால் இப்போது தொண்டர்கள் வருகை மிகவும் குறைந்து விட்டது.
எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிகாலையிலேயே கூட்டம் திரண்டு விடுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வீடு கொஞ்சம் கொஞ்சமாக களை இழந்தது. இன்று காலையில் முற்றிலும் ஒரு தொண்டர் கூட வரவில்லை.
வெளிப்புற கேட் திறந்து இருந்தது. ஓ.பி.எஸ். வீட்டுக்குள் தனியாக இருந்தார். வெளியே ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் நிற்கிறார்கள்.
பகல் 11 மணிக்கு பிறகு வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ரவீந்திரநாத் ஆகிய 4 பேரும் வந்தனர்.
ஆனாலும் அடிமட்ட தொண்டர்கள் கூட வராதது அவருக்கு ஏமாற்றம் அளித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்