search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்
    X

    அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்

    • அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் ஓங்கி உள்ள நிலையில் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட உள்ளதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
    • பொதுக்குழுவுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை வானகரத்தில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் ஓங்கி உள்ள நிலையில் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட உள்ளதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். பொதுக்குழுவுக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக வரவேற்பு பேனர்கள் தயார் செய்யப்பட்டு மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த பேனர்களை வைக்கும் பணி இன்று நடந்து வருகிறது. மேலும் அலங்கார வளைவுகள் மற்றும் முகப்பு தோற்றத்தை உருவாக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து இருக்கும் படங்களும் பேனர்களில் அச்சிடப்பட்டுள்ளன.

    மேலும் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டப பகுதியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் அனைவரும் அமருவதற்கான இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு நடைபெறும் இடம் மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

    Next Story
    ×