search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் நாளை மறுநாள்  டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம்
    X

    சென்னையில் நாளை மறுநாள் டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம்

    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் (15-ந்தேதி) நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    பொதுக்குழுவில் பங்கேற்கும் டி.டி.வி.தினகரனுக்கு கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக டி.டி.வி. தினகரன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.

    இதனால் இது தொடர்பாக தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினையை மையமாக வைத்து முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத வகையில் அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×